Skip to main content

திடீர் சந்திப்பு- தைலாபுரம் வந்த குருமூர்த்தி, சைதை துரைசாமி

Published on 05/06/2025 | Edited on 05/06/2025
 Sudden meeting - Gurumurthy and Saidai Duraisamy arrive in Tailapuram

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும்  இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து  01/06/2025 அன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''என்னை யாரும் இயக்க முடியாது. சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி சொல்வது அவருடைய கருத்து. அன்புமணி விகாரம் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எல்லா கட்சிகளிலும்  நடக்கும் ஒன்றுதான்'' என தெரிவித்திருந்தார்.இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பாமக நிர்வாகிகள் குறிப்பாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (05/06/2025) தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டதாக தகவல் வெளியானது. சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்