Skip to main content

சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

bravo

 

 

சென்னை அணியின் முன்னணி வீரரான பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளது, சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி, தோல்விகளை அடிப்படியாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும். தரவரிசைப்பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய பிராவோ, மீண்டும் களமிறங்கவில்லை. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ முழுமையாக விலகியுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

“வெளியேறும் நேரம் வந்துவிட்டது..” - டுவைன் பிராவோ

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

"It's time to leave." -   Bravo

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், பன்னிரண்டு அணிகள் இரு குழுக்களாக விளையாடிவருகின்றன. இதில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சரியாக விளையாடாததால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நேற்று (04.11.2021) நடைபெற்ற இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

 

ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இது பிராவோவுக்கு இறுதி போட்டியாக இருக்கும். ஓய்வு குறித்து தெரிவித்துள்ள பிராவோ, "கடந்த 18 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியுள்ளேன். அதில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளேன். தற்போது வெளியேறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பிராவோ காயம்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

bravo

 

காயம் காரணமாக கடந்த போட்டியில் பாதியில் வெளியேறிய பிராவோ, இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற இருக்கிற 37-ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தர வரிசைப்பட்டியலில் 7 -ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், இனி வரவிருக்கிற அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு சென்னை அணி உள்ளாகியுள்ளது. 

 

இந்நிலையில், கடந்த போட்டியில் காயம் காரணமாக பிராவோ பாதியில் வெளியேறியதால் அவரால் கடைசி ஓவரில் பந்து வீச முடியவில்லை. அதற்குப் பதிலாக ஜடேஜா வீசிய ஓவரில் சென்னை அணி வெற்றியைக் கோட்டை விட்டது. அந்த ஓவரை பிராவோ வீசியிருந்தால் முடிவு வேறு வகையில் இருந்திருக்கும் என சென்னை அணி ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

 

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் இது குறித்துப் பேசுகையில், காயத்தின் தன்மை தீவிரமாக இருக்கும்பட்சத்தில் அடுத்த சில போட்டிகளில் பிராவோ களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிவித்தார். இதனால் பிராவோ இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. வாழ்வா-சாவா நிலையில் வரவிருக்கிற போட்டிகளை எதிர்கொள்ளும் சென்னை அணிக்கு, பிராவோவின் காயம் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.