Skip to main content

கோடிகளைக் கொட்டிய கரோனா... ஜெப் பெசோஸ் சொத்துமதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்வு !!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

jeff bezos

 

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்வது பெரும் சிரமமாக உள்ளது. பல நாடுகள் தொழில்முடக்கம் காரணமாக பெருமளவில் பொருளாதாரச்சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஃபோர்ப்ஸ் இதழில் அமேசான் நிறுவனரின் சொத்து மதிப்பு உயர்வு குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி தலைசுற்ற வைக்கிறது. 

 

அதில் இந்தாண்டின் தொடக்கத்தில் 115 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 204.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர் வரிசையில் சில ஆண்டுகளுக்கு யாரும் தொடமுடியாத இடத்திற்கு சென்றுள்ளார். இம்மதிப்பானது இரண்டாம் இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட 90 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகம். இந்தத் திடீர் ஏற்றத்திற்கு, கரோனா ஊரடங்கால் மக்கள் முழுமையாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் இணையவழி வர்த்தகம் அதிகரித்ததே காரணமாக சொல்லப்படுகிறது. அமேசான் நிறுவனத்தைத் தவிர்த்து வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல நிறுவனங்களிலும் ஜெப்பெசோஸ் முதலீடு செய்துள்ளார்.

 

கடந்த ஆண்டில் ஜெப் பெசோஸிற்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது. அதில் அவர் நஷ்ட ஈடாக அமேசான் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை மனைவிக்கு அளித்தார். இந்த விவாகரத்து நடந்திருக்காத பட்சத்தில் அவரது சொத்து மதிப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

 

ஜெப்பிடம் இருந்து 25 சதவிகித பங்குகளைப் பெற்ற அவரது மனைவி உலக பணக்காரர் பட்டியலில் 14 இடத்திலும், உலக பணக்காரப் பெண்கள் வரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.        

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெஃப் பெசோஸ்- எலான் மஸ்க் மோதலால் தள்ளிப்போன நாசா திட்டம்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

elon musk jeff

 

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த போது, 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து நிலவில் மனிதர்களை தரையிறக்கும் லேண்டரை வடிவைப்பதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

 

அதன்தொடர்ச்சியாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்கு லேண்டரை வடிவைப்பதற்கான 2.9 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நாசா வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.

 

இந்தநிலையில் நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த வழக்கின் காரணமாக ஏழு மாதங்களை இழந்துவிட்டதாகவும், இதன் காரணமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் 2025 ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெற வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

அசுர வேகத்தில் முன்னேறிய எலான் மஸ்க்; விட்ட இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானி!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

elon musk- mukesh ambani

 

போர்ப்ஸ் பத்திரிக்கை, 'உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை' ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான உலகத்தின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை நேற்று வெளியிட்டது. இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவரின் சொத்துமதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தப் பட்டியலில், இரண்டாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். கடந்தாண்டு இவர் 31 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் தற்போதைய சொத்துமதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி, 10 ஆம் இடத்தில் உள்ளார். மேலும், அவர் சீனா கோடீஸ்வரர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் ஆசியாவின் பெரும்பணக்காரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு, 84.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

 

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தை கௌதம் அதானி, பிடித்துள்ளார். அவரின் சொத்துமதிப்பு 50.5 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவில் பில்லியன் டாலர்களுக்கு மேல் 140 பேர் சொத்து வைத்துள்ளனர். இதன்மூலம் அதிக பணக்காரர்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.