Skip to main content

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்! 

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

 

earthquake

 

இந்தோனேஷியாவின் லம்போக் தீவில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லம்போக்கை தாக்கிய நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 5.9ஆக பதிவாகியுள்ளது. இம்முறை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடவில்லை. 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதே லம்போக் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியது. 164 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.     


 

சார்ந்த செய்திகள்