Skip to main content

கடந்த 24 மணி நேரத்தில் 1,83,000 கரோனா தொற்று!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

gh

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஒரே நாளில் 1,83,000 புதிய கரோனா பாதிப்புக்கள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளது. பிரேசிலில் மட்டும் 54,771, அமெரிக்காவில் 36,617, இந்தியாவில்15,400 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்