Skip to main content

'நாசா'வின் உயர்ந்த பதவிக்கு தேர்வாகியுள்ள இந்திய பெண்மணி!!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Indian woman selected for NASA's highest designation!!
                                                         பவ்யா லால்

 

உலகத்தின் சிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையமாக கருதப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி தேர்வாகி உள்ளது, நாட்டிற்கே பெரும் சந்தோஷமான ஒன்றாக கருதப்படுகிறது.

 

கமாலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை போன்ற இன்னும் பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்களின் திறமையால் உயர்ந்த பதவிகளில் தேர்ந்து பணியாற்றி வருகின்ற இந்தச் சூழலில் நாசாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மனி தேர்வாகியிருப்பது கூடுதல் பெருமைக்குரியதாகப் பார்க்கப்டுகிறது.

 

நாசாவின் செயல் தலைவராக தேர்வாகியுள்ள அமெரிக்க இந்தியரான பவ்யா லால், அமெரிக்காவின் மசாசு செட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அணுசக்தி பொறியியல் துறையில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். ஜார்ஜ் வாஷிங்கடன் பல்கலைகழகத்தில், பொது கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

 

இவர் இதற்கு முன்னர் பல முக்கியப் பதவிகளில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. ஜோ பைடன் அதிபராக பதவியேற்றபோது, அதிகார மாற்றத்திற்கான மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்றவர். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பவ்யா லால்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர்; உணவு இல்லாமல் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

An Indian woman suffering from food shortages at israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

 

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்குக் கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்த போரினால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 நாள்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் சேலச்சோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷேர்லி. இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுக்கு சென்று அங்கு முதியவர்களுக்கு பணிவிடை செய்யும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1 வாரமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் போர் நடந்து வருகிறது. இதனையடுத்து, ஹமாஸ் படையினர் நிர்வகித்து வரும் காசா பகுதி அருகே இஸ்ரேலில் தான் ஷேர்லி வசித்து வருகிறார். இந்த போர் காரணமாக அந்த பகுதியில் ஷேர்லி சிக்கித் தவித்து வருகிறார். அவர் அங்கு தனது செல்போன் மூலம் கேரளாவில் வாழும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். 

 

அப்போது அவர், “பயங்கர ராக்கெட் குண்டு வெடித்த சத்தத்துடன் தான் நான் காலை எழுந்தேன். கடந்த 3 நாள்களாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். நான் பணிபுரியும் இடம் பாதுகாப்பானதாக இல்லை. 3 நாள்களாக வீட்டைப் பூட்டிக் கொண்டு உணவு, தண்ணீர் இல்லாமல் வசித்து வருகிறேன். இதேபோல், பல இந்தியர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்” என்று பேசினார். இதேபோல் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பதுங்கு குழியில் வாழ்ந்து வருவதாகத் தனது கணவரிடம் தகவல் கூறியிருக்கிறார். 

 

திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை இணை பேராசிரியர் ராதிகா என்பவர் இஸ்ரேலில் பதுங்கு குழியில் வாழ்ந்து வருவதாகத் தனது கணவருக்கு குறுந்தகவல் மூலம் தகவல் கூறியுள்ளார். இது குறித்து அவரது கணவர் ரமேஷ் கூறியதாவது, “எனது மனைவி  ராதிகா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். தற்போது ஏற்பட்ட சூழலில் எனது மனைவி அங்கு சிக்கியுள்ளார். அவர் இருக்கும் பகுதிக்கும், தாக்குதல் நடக்கும் பகுதிக்கும் 60 கி.மீ தான் இடைவெளி இருக்கிறது. தொடர்ந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாகத் தெரிவித்தார். இஸ்ரேல் அரசு, குண்டு வெடிப்பு சம்பவங்கள் சமயங்களில் முன்னெச்சரிக்கையாக ‘சைலன்சர்’ ஒலியை எழுப்ப செய்வார்கள். அப்போது அனைவரும், பாதுகாப்புடன் இருப்பதற்காக பதுங்கு குழியில் சென்று தங்குவதாகவும், நிலைமை சரியான பிறகு அறைக்கு வந்து தங்குவதாகவும் எனது மனைவி தெரிவித்துள்ளார்.” என்று கூறினார். 

 

 

Next Story

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த 4 விண்வெளி வீரர்கள்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

4 astronauts reach the International Space Station

 

விண்வெளி வீரர்கள் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்ததாக நாசா அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது.

 

இந்தப் பயணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகியோர் அடங்கிய 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இவர்கள் ஒரு வருட காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.