Skip to main content

மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் -அரசாணை வெளியீடு

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
Students will be sent home if they have a fever


கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் வரும் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.


இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனியறையில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கலாம் என பேரிடர் மேலாண்மைதுறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்