Skip to main content

சாலையில் வருவோர் போவோருக்கு அரிவாள் வெட்டு;சென்னையில் கஞ்சாபோதையில் ரவுடிகும்பல் கண்மூடித்தனமாக கொடூரத்தாக்குதல்

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

சென்னை செம்மஞ்சேரியில் கஞ்சாப்போதையில் சாலையில் நடந்து செல்பவர்கள் வருபவர்கள் என கண்ணில்பட்டவர்கள் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலால் பெரும் பரபரப்பு நிலவியது.

 

attack

 

செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்தவர்களுக்கும் அருகே உள்ள பெரும்பாக்கம் குடிசைமாற்றுவாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலருக்கும் அவ்வப்போது மோதல்கள் நிலவிவந்துள்ள நிலையில் தற்போது நேற்று இரவு பெரும்பாக்கத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் செம்மஞ்சேரி பகுதிக்கு மது மற்றும் கஞ்சா போதையில் அந்த பகுதிக்கு வந்தனர்.
 

attack

 

 

attack

 

attack

 

வந்தவர்கள் ரோட்டில் வருபவர்கள் அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கினர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பதுங்கி கொண்ட போதும் அந்த கும்பல் பொது சொத்துக்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மின் கம்பங்கள், வாகனங்கள் உடைக்கப்பட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அரிவாளால் தாக்கியதில் ஜெயசீலன் மற்றும் ஐயப்பன் என இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் போலிஸார் கைது செய்தாலும் 15 ரீமான்ட்டில் வந்துவிடுவோம் என்ன செய்வீர்கள் என ரவுடிகள் மிரட்டல் விட்டுவிட்டு செல்கின்றனர். இப்படி அடிக்கடி நடக்கிறது. எப்போதுதான் இதெற்கெல்லாம் தீர்வு வருமோ என அச்சம் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.