Skip to main content

10 மணி வரை 7 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 04/06/2025 | Edited on 04/06/2025
Rain alert for 7 districts until 10 am

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பின்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைப்பொழிவு காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 82.61 அடியாகவும், நீர் இருப்பு 17.1 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 6,965 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 855 உடனடியாக உள்ளது. வரும் ஜூன் எட்டாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்