Skip to main content

சாலையில் கிடந்த பணப்பை... நேர்மையுடன் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு!

Published on 30/10/2021 | Edited on 31/10/2021

 

Police praise the person who handed over the money lying on the road ... honestly!

 

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி வேளாண் மூலம் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள் தாரணி ஆகிய 3 பேரும் திருச்சி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு தாங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்ல தயாரானபோது சாலையோரத்தில் ஒரு சிறிய கைப்பை கிடந்துள்ளது. இதைப் பார்த்த சிறுமி உடனே சென்று அதை எடுத்து வந்து தந்தை ராஜீவ்காந்தியிடம் கொடுத்துள்ளார். திறந்து பார்த்தபோது அதில் பணம் இருப்பதைப் பார்த்த ராஜீவ்காந்தி மணப்பாறை காவல் நிலையத்திற்குச் சென்று அந்த பையைக் கொடுத்துள்ளனர்.

 

அதை வாங்கி பொறுமையைச் சோதித்த காவலர்கள் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பதாகக் கூறி நேர்மை வெளிப்படுத்திய ராஜீவ்காந்திக்கு காவலர்கள் பொன்னாடை அணிவித்து தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.  மேலும் அந்த பணத்திற்கான உரிமை கோரி நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த குஞ்சு பிள்ளை என்பவர் புகார் அளித்த நிலையில், அந்த படத்தை உரிய நபரிடம் கொண்டு காவல்துறை சேர்த்துள்ளது. தகவல் அறிந்து வறுமையிலும் நேர்மையாக இருந்த ராஜீவ்காந்தியை அப்பகுதி பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்

 

 

 

சார்ந்த செய்திகள்