Skip to main content

போலி மருத்துவர்கள் மீது வழக்கு மற்றும் கைது...

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Police arrested fake doctors kallakurichi district

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கூவாகம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், தமிழ்ச்செல்வி மூன்றாவது முறையாக கருத்தரித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று கருதி திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள மருத்துவர்கள் ஸ்டீபன் அவரது மனைவி சத்திய ராணி ஆகியோரிடம் சென்று தமிழ்ச்செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். 

 

ஆனால் மேற்படி இருவரும், முறையாக மருத்துவம் படிக்காமல், போதிய பயிற்சி இல்லாமல் தவறாக மருத்துவம் செய்துள்ளனர். இதனால் தமிழ்ச்செல்விக்கு கருக்கலைப்பு செய்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கர்ப்பப்பையை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டீபன், சத்திய ராணி ஆகியோரை குமரேசன் சந்தித்து தவறான சிகிச்சை அளித்தது குறித்து விசாரணை செய்துள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் குமரேசனை மிரட்டியுள்ளனர். அப்போதுதான், அவர்கள் போலி மருத்துவர்கள் என்பது தெரியவந்தள்ளது. 

 

இதை தொடர்ந்து குமரேசன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் போலி மருத்துவர்களான கணவன் மனைவி இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த போலி மருத்துவர்களான கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

அடுத்து, ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலையில் உள்ளது லா.கூடலூர். இந்த ஊரில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சென்றிருந்தனர். அப்போது இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த முருகேசன் என்பவரது கூரை வீட்டை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அங்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் ஒரு மூதாட்டிக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

 

அதைக்கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம்  விசாரணை செய்தனர். அவர், 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு,  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மருந்தகம் வைத்து அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலருக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர்.  

 

வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால் பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து போலி மருத்துவர் இளையராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் வைத்திருந்த மருந்தகத்திற்கும் சீல் வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.