Skip to main content

சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை; மூன்று பேர் கைது

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Police arrested 3 people for selling drugs salem

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபடி, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.  

 

வெளிமாநில மாணவ, மாணவிகள் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்துத் தங்கி, கல்லூரிக்குச் சென்று வருகின்றனர். இந்த கல்லூரி  மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல், போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ சக்தி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

 

கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் சின்ன சீரகாபாடியில் தங்கியிருந்து 'மெத்தாம்பேட்டமைன்' (Methamphetamine) என்ற போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அந்த வீட்டைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), அதே பகுதியைச் சேர்ந்த அமல் (20), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தாரப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களில் அமல், பிஇ, 2ம் ஆண்டும், விக்னேஷ்குமார் பிஇ, இறுதியாண்டும் படித்து வருவதும் தெரிய வந்தது. மூவரிடமும் விசாரணை நடத்தியதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

 

பெங்களூருவில் இருந்து மெத்தாம்பேட்டமைன் போதை மருந்தை ஒரு கிராம் 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து, சேலம் கல்லூரி மாணவர்களிடம் 5000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம் மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளை கைகளில் கசக்கிப் பயன்படுத்தினால், ஒரு வாரம் வரை போதை இருக்கும் என்கிறார்கள்.  

 

கைதான மூன்று பேரும் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களைத் தேடி வருகின்றனர். பெங்களூருவிலிருந்து செயல்படும் போதை சப்ளை கும்பலைக் கூண்டோடு பிடிக்கவும் சேலம் மாவட்டக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.