Skip to main content

கொள்ளையன் முருகன் திருச்சியில் பேசிய தத்துவம்! அதிர்ச்சியில் போலீஸ்!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவரை துளை போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சுரேஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொள்ளையில் பிரபல கொள்ளையன் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

 

The Philosophy of Murugan; Police in shock!

 

பெங்களுர் நகரில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தான். பின்னர் அவனை சிறையில் அடைத்த காவல் துறையினர், கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றங்கரையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பெங்களூரு காவல் துறையினர் அவனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட நகையை மீட்டு, பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தகவல் திருச்சி காவல்துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து, பெங்களூரு காவல்துறையினரை பெரம்பலூர் அருகே வழிமறித்து மீட்கப்பட்ட நகைகள் குறித்த விபரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல்துறையினர் முடிவு செய்து முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் முருகனிடம் விசாரணை மேற்கொள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் திரிவேணி அனுமதியளித்தார். இந்த உத்தரவை பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்து, முருகனை திருச்சிக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

 

The Philosophy of Murugan; Police in shock!

 

பின்னர் திருச்சி காஜாமலை அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் முன்பு முருகனை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அவனை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இதற்கிடையில் திருச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும் போது முருகன் செய்தியாளரிடம்,' எனக்கு நிறைய திறமை உள்ளது. நான் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவேன். நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன். நான் ஒரு நல்ல படத் தயாரிப்பாளர். என் வாழ்க்கையில் சிறை அனுபவம் நிறைய உள்ளது' தத்துவம் பேச ஆரம்பித்து இருப்பது போலீசாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் கொள்ளை நடந்து 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசிடம் சிக்கியிருக்கும் முருகனை காவலில் எடுக்கக் கோரும் மனுவை நீதிமன்றத்தில் இன்று திருச்சியில் காவல்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். ஏற்கனவே முருகன் தன்னுடைய தொடர் கொள்ளையில் போலீஸ் தலையீடாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சமாக கார், இலட்ச கணக்கில் பணம், நடிகைக்கு நகை என்று கொடுத்தது எல்லாம் வெளியே வருமே என்கிற பீதியில்தான் போலீசார் கலக்கம் அடைய காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்த போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.