Skip to main content

திரையரங்கு முன் 69 பானைகளில் பொங்கலிட்ட ரஜினி ரசிகர்கள்

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

p


பேட்ட திரைப்படம் திரையான திரையரங்கு முன் பெண்கள் 69 பானைகளில் பொங்காலிட்டு ரசிகா்களை உற்சாக படுத்தினார்கள். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான பேட்ட திரைப்படம் இன்று நாடு முமுவதும் ரிலிசாகியுள்ளது. இதையொட்டி ரஜினி ரசிகா்கள் திரையரங்கு முன் ரஜினியின் கட்அவுட்டுக்கு பால் ஊற்றியும் தியேட்டா் முன் பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டம் என துள்ளல் போட்டனா். 


            


அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சியை காண ரசிகா்கள் 5 மணிக்கே திரையரங்கு முன் குவிய தொடங்கினார்கள். நாகர்கோவிலில் ராஜாஸ் மாலில் உள்ள இரண்டு திரையரங்குகளில் ஒன்றில் பேட்ட படமும் இன்னொன்றில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் அந்த தியேட்டா் முன் இரண்டு பேருடைய ரசிகா்களும் போட்டி போட்டு கொண்டு ஆட்டம் போட்டனா்.

 

 

இதே போல் வடசேரி வசந்தம் பேலஸிசிலும் பேட்ட படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கு காலை 6 மணிக்கு காட்சி தொடங்குவதற்கு முன் ரஜினியின் வயதை குறிக்கும் விதமாக 69 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டு, திரைக்கு ஆரத்தி எடுத்தனா். அதன்பிறகு படம் திரையிடப்பட்டது. 
    

 

 

சார்ந்த செய்திகள்