Skip to main content

மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

One passes away near Dindivanam bypass

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது திண்டிவனம் நகரம். இந்த நகரத்தை கடப்பதற்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு பக்கத்தில் இருந்தும் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிலையம், சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. மேலும், அது ஏராளமான  மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி. 

 

இந்நிலையில், நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணி அளவில் 35 வயது வாலிபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். அவரது தலை தரையில் மோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த இளைஞர் பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் அதேநேரத்தில் சாலையில் மொளசூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மனைவி 42 வயது விமலா என்பவர் பஸ் பயணிகளுக்காக வெள்ளரிப் பிஞ்சுகளை கையில் ஏந்தியபடி விற்றுக்கொண்டிருந்தார். 

 

பாலத்தில் இருந்து கீழே குதித்த அந்த நபர், விமலா மீது விழுந்துள்ளார். இதில் விமலா படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த விமலாவை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார். பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர், அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த மனநலம் பாதித்தவர் ஆக இருக்கக் கூடும் என போலீஸ் தரப்பில் கருதுகின்றனர். அவர் அணிந்திருந்த சட்டை காலரில் மதுரையை சேர்ந்த டைலர் ஒருவரின் முகவரி இருந்துள்ளது. இறந்த நபர் யார், எந்த ஊர், இங்கு எப்படி வந்தார் என்பது குறித்து திண்டிவனம் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வருகிறார். பரபரப்பான திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.