Skip to main content

தவித்த மக்களின் துயரத்தை வெளியிட்ட நக்கீரன்; நேரில் சென்று உதவிய அமைச்சர்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Minister met people affected news published by nakkheeran and consoled them

 

‘ஒரே ராத்திரியில் நடந்த சோகம்; 122 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநோதம்’ என சீர்காழி மழைவெள்ளம் குறித்தும், இருவகொள்ளை கிராமத்தில் மெழுகுவர்த்தி கூட இல்லாமல் சாலை துண்டிக்கப்பட்டு மக்கள் தவிப்பதையும் நமது நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம்.

 

அதனைக் கண்ட பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் டிராக்டர், பைக்கில் சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர். மேலும், பல்வேறு பகுதிகளில் கரண்ட் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு கரண்ட் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரண்ட் இல்லாத எந்தப் பகுதியிலும் ஜெனரேட்டர் நிறுத்தப்படக் கூடாது என உத்தரவிட்டார்.

 

தமிழகத்திலேயே அதிக மழையாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவில் ஐந்தாவது நாளாக அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.  சீர்காழி அருகே வேம்படி, வாடி, தாண்டவன்குளம், வேட்டங்குடி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

 

Minister met people affected news published by nakkheeran and consoled them

 

தொடர்ந்து தண்ணீரால் சாலை முழுவதும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாடி, இருவகொள்ளை கிராமங்களை டிராக்டர் மூலம் சென்று பார்வையிட்ட  அமைச்சர் மெய்யநாதன் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, “வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் தண்ணீர் வடிவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் சரியான முறையில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததை காணமுடிகிறது. அவற்றை தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வடிவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெள்ளம் அதிகம் பாதித்த சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கப்படும்.” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.