Skip to main content

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டம்..!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

mini marathon conducts for creating awareness for 100% voting

 

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இணைந்து, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்தியது. இந்த ஓட்டம் சிதம்பரம் நகரம் தெற்கு வீதியில் தொடங்கி மேலவீதி, வடக்குவீதி, கீழ வீதி வழியாக அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இதனை கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

பின்னர் காவல் கண்காணிப்பாளர் இந்தத் தொடர் ஓட்டத்தில் காவல்துறையினருடன் கலந்துகொண்டார். 6 கிமீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வாழ்த்துரை வழங்கி, முதல் மூன்று இடங்களில் வந்த இளைஞர்களுக்கு ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

 

mini marathon conducts for creating awareness for 100% voting

 

அதேபோல் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களில் வந்தவர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர் ஓட்டத்தில் 15வது இடம்வரை வந்தவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரி மாணவர்கள், அரசின் விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடினார்கள். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில் டிஜி என்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க் நிறுவனம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ரூ. 5 நாணயம் அடங்கிய அட்டையைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், டிஎஸ்பி லாமேக், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.