Skip to main content

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்!!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அருகே உள்ள அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை புதிய சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்திற்காக நாளை மறுநாள் ஆனந்தவாடி கிராமத்தில் கருத்து கேட்பு கூட்டம் அரியலூர்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

meeting with collector


அரசு சிமெண்ட் ஆலை கடந்த 40 ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல் அரியலூர் தாலுக்காவில் வெட்டியெடுத்து சிமெண்ட் உற்பத்தி செய்து  வருகிறது .  40 ஆண்டுகாலமாக  கல்லங்குறிச்சி ,உசேனபாத் , கயர்லாபாத்  பகுதியில் அனுமதி பெற்று 1250 ஏக்கர்  சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் வெட்டப்பட்டன . வெட்டி முடிக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் வெட்டுவதற்கான அனுமதி காலம் 2001 ஆம் ஆண்டும்  2005 ஆம் ஆண்டும் முடிந்து விட்டன.

கல்லங்குறிச்சி, உசேனபாத் ஊராட்சி கொல்லாபுரம் அருகேயும் , கயர்லா பாத் ஆகிய கிராமங்களில் சுண்ணாம்புக்கல் அதிக ஆழம் இல்லை . பத்தடி இருபதடி மட்டுமே சுண்ணாம்புக்கல் இருந்தது . அந்த  சுண்ணாம்புக்கல் கற்கள் வெட்டி எடுத்து அந்த சுரங்கங்களும் அனுமதியும் முடிந்துவிட்டன. வெட்டி முடித்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அரசு சிமெண்ட் ஆலை நிறுவனம் என்ன செய்து உள்ளது?  அதனுடைய காலம் முடிந்துவிட்டது முடிந்த பிறகு அந்த சுரங்கங்களை என்ன செய்தது?  நெய்வேலி போன்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் திட்டமிட்டு அந்த சுரங்கங்களை மூடி மரங்களை நட்டு உள்ளது. நீர் நிலையாக மாற்றியுள்ளது. சூரிய மின்சக்தி நிறுவனம் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கத்தின் மீது மண்ணை கொட்டி சமமாக்கி அதன்மேல் அது நிறுவியுள்ளது.

ஆனால் அரியலூரில்  செயல்பட்டு வரும் அரியலூர் அரசு சிமெண்ட்  அரியலூர் தாலுகாவில் வெட்டப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அது போன்ற எந்த விதமான ஏற்பாடும் செய்யாமல் 1250 ஏக்கர் சுரங்கங்கள் அனுமதி  முடிந்த பிறகு பத்தாண்டுகள் 15 ஆண்டுகள் ஆகியும்  அதை எந்த விதமான பணியும் செய்யாமல் பாலைவனம் போல வைத்துள்ளது.  அதனை நீர் தேக்கமாக மாற்றி இருக்கலாம் அல்லது  அடர்ந்த காடுகளாக மாற்றியிருக்கலாம். இரண்டும் செய்யாமல் அரசிடம் ஒப்படைக்காமல் இவர்களே வைத்துக் கொண்டிருப்பது நியாயமா?  இது சட்டத்தின்படி சரியானதா ?

ஆகையால் ஆனந்தவாடியில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் இந்த அரசு சிமெண்ட் ஆலைக்கு இனிமேல் புதிதாக எந்த சுரங்க அனுமதியும் அனுமதிக்கக்கூடாது. இதுவரை முடிந்த கல்லங்ககுறிச்சி, உசேனபாத்  கொல்லாபுரம் , கயர்லாபாத் கிராமத்தில்  உள்ள ஆயிரத்து 250 ஏக்கர் முடிந்த சுரங்கத்தில் நீர்நிலையாகவோ, அடர்ந்த காடுகளாகவோ, சூரிய மின் உற்பத்தி தகடுகள் வைத்து மின் உற்பத்தி நிலையமாகவோ  மாற்ற வேண்டும்.

அதற்கு அரியலூர் நகரில் உள்ள மற்றும்  ஒன்றியங்களில் உள்ள செட்டி ஏரி போன்ற 500  ஏரி , குளம் குட்டைகளில் இருந்து கருப்பு மண்வெட்டி கொண்டு வந்து 5 அடி உயரத்துக்கு  வெட்டி முடிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1250 ஏக்கர் சுரங்கத்தில் நிரப்பி அதில் மரங்களை வைத்து நட்டு அடர்ந்த  காடுகளை உருவாக்கி இப்பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மேம்படும் செய்ய வேண்டும். அது இல்லாமல் இந்த அரசு சிமெண்ட் ஆலையை என்ற ஒரே காரணத்திற்காக அனுமதி அளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  


எக்காரணத்தை முன்னிட்டும் இந்த அரசு சிமெண்ட் ஆலை வெட்டி முடிக்கப்பட்ட 1250 ஏக்கர் சுரங்கத்தை  சீர்திருத்தம் செய்து அரசிடம் ஒப்படைக்கும் வரை அதற்கு எந்தவிதமான புது சுரங்க அனுமதி தரக்கூடாது என்பது அரியலூர் தொகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆகையால் எந்த அனுமதியும் தர வேண்டாம் என்பது அரியலூர் பகுதி தொகுதி  பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.