Skip to main content

கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்லும் போலீஸ்... மதுரையில் பரபரப்பு...    

Published on 17/05/2020 | Edited on 17/05/2020

    

madurai city



கடந்த 40 நாட்களும் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் தற்போது தான் 32 வகையான கடைகள் இரவு 7 மணி வரை திறக்க அரசு சில நிபந்தனையுன் உத்தரவிட்டு சிறு சிறு கடைகள் திறந்திருந்த  நிலையில், காவல்துறை தொடர்ச்சியாக ஆங்காங்கே கண்காணித்து ஏழு மணி தாண்டி ஒரு நிமிடம் காட்டினாலும் அதை எதிர்பார்த்து கடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்து கடை அடைப்பதற்க்கு முன் உள்ளே நுழைந்து மணி 7 ஆகிவிட்டது, இன்னும் கடையை அடைக்காம இருக்கீங்க என்று சொல்லிக்கொண்டே  அங்கு இருக்கும் செல்போன் மற்றும் சில விலையுயர்ந்த பொருட்களை எடுத்து எடுத்துக்கொண்டு நீங்க காவல் நிலையத்துக்கு நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என சென்று விடுகின்றனர்.
 

கடைக்காரர்கள் எவ்வளவோ மன்றாடியும் தங்களது பொருட்களை கொடுக்க மறுத்து போய்விடுகின்றனர். வியாபாரிகள்  இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் காத்து கிடந்து 1500 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு அதற்க்கு ரசீது கேட்டவர்களை அடித்தும் விரட்டியுள்ளார்கள். ''இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த கரோனா சமயத்தில் எந்தவித வியாபரமும் இல்லாமல் பொருளாதார கஷ்டத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது'' என வியாபாரிகள் அனைவரும் புகார் தெரிவித்துள்ளார்கள்.
 

இது குறித்து புதூர் வியாபாரிகள் சங்க செயலாளர் திரவியம், ''மக்கள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் மருந்து தவிர வேறு பொருட்களை யாரும் வாங்க முன்வருவதில்லை. அப்படியிருக்கும்போது வியாபாரிகளின் உடமைகளை கொண்டு செல்வது அவர்களை தகாத வார்தைகளில் திட்டுவது, மேலும் அபராதமாக 1600 வசூலிப்பது என்பது மிகவும் மனவேதனையை தருகிறது'' என்றார். இது அனைத்து வியாபாரிகளிடமும் அச்சத்தையும் கோபத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது