
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வரை திருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தோரணம், மலர் அலங்கார வாகனங்களில் அம்மன் வீற்றிருக்க வான வேடிக்கைகள், மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்களின் ஆரத்தி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக் கிழமையும், இன்று திங்கட்கிழமை மாலை காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஒரு தேரில் பேச்சியம்மன் வீற்றிருக்க அந்த தேரை பெண்களும், மற்றொரு தேரில் வாழவந்த பிள்ளையார் வீற்றிருக்க அந்த தேரை சிறுவர்களும், பெண்களும் இழுத்துச் சென்றனர். கடைசியாக வந்த பெரிய தேரில் மாரியம்மன் வீற்றிருக்க ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
3 தேர்களின் தேரோட்டம் ஒரே நேரத்தில் பக்தர்கள் தேரோடும் வீதியில் இழுத்துச் சென்றது பக்தர்களை கவர்ந்தது. 3 தேர்களின் தேரோட்டத் திருவிழாவிற்கான சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை தீர்த்தவாரியும், நாளை மறுநாள் தெப்பத் திருவிழாக்களும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் வருகின்றனர்.