Skip to main content

காணாமல்போன குளத்தை கண்டுபிடித்துத் தரக்கோரிய எழுத்தாளர் உட்பட 4 பேர் கைது!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020
incident inpudukottai

 

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிாமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணன் (வயது 55). எழுத்தாளர். இவர் மற்றும் இவரது தாயார் வெள்ளையம்மள் (வயது 78), இவரது சகோதரிகள் முத்துலெட்சுமி (வயது 46), சித்ரா (வயது 44). ஆகிய 4 பேரும் கொத்தமங்கலம் வாடிமாநர் கடைவீதியில் உள்ள ரவுண்டானா அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக கூறி பதாகையுடன் அமர முயன்றனர்.

அப்போது அங்கு வந்த கீரமங்கலம் காவ்உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உண்ணாவிரதம் இருக்க காரணம் கேட்டார். அதற்கு எங்கள் பகுதியில் இருந்த வீரப்பெருமாள் ஊரணியை காணவில்லை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அந்தக் குளம் கண்டுபிடித்து தரும் வரை குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருக்க போகிறோம் என்றனர். மேலும் தனது சொந்த நிலங்களும் சிலர் அபகரித்து வருகிறார்கள். அதுபற்றியும் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை. அதனால் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றார்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்று கூறிய போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கீரமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதம் தொடருவோம் என்று காவல் நிலையத்திலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து கீரமங்கலம் காவல் நிலையம் வந்த ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜ் உண்ணாவிரதம் இருக்க முயன்ற முத்துக்கண்ணணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சில நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்ற வருவாய் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார். தொடர்ந்து மாலை உண்ணாவிரப் போராட்டம் முடிக்கப்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.