Skip to main content

‘வீட்டுக்குள்ள எம்புட்டு நேரம்தான் முடங்கியே கிடக்கிறது?’ -வெளியே சுற்றினால் விபரீதம் காத்திருக்கிறது!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

கரோனா வைரஸ் தொற்றால், உலகம் முழுவதும் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிவது தெரிந்தும், ‘ரொம்ப போரடிக்கிறது’ என்ற மனப்புழுக்கத்தின் காரணமாக, ஊரடங்கு உத்தரவை மீறி சிவகாசி சாலைகளில் டூ வீலர்களில் ‘ரவுண்ட்’ அடித்த இளைஞர்களிடம் லத்தியை உயர்த்தி கடுமையாக எச்சரித்த காவல்துறையினர், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பினார்கள்,

 

how many hours  stay freezing in home?

 

ஸ்ரீவில்லிபுத்தூரிலோ, சாலையில் அங்கங்கே கூடி நின்றவர்கள் மீது ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து துரத்தினர். அதனால் கோபமடைந்தவர்கள்  நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ‘இந்த ஊருல யாருக்கு கொரோனா இருக்கு? நமக்கு ஒண்ணும் ஆகாது..’ என்ற அலட்சியமே, விடுமுறை கொண்டாட்ட மனநிலையால், வெளியில் தலைகாட்டுவதும் ஊர் சுற்றுவதுமாக உள்ளனர்.  

 

how many hours  stay freezing in home?

 

சுப்பம்மாளுக்கோ, ‘வீட்ல இருந்து வெளியவந்து வாழை இலைகளையும், பழங்களையும் தன்கிட்ட யாராவது வாங்கிட்டு போகமாட்டாங்களா?’ என்ற பரிதவிப்பு வாட்டியது. காவல்துறையின் கெடுபிடியால், வழக்கமாக விற்கும் இடத்தில் கீரைக்கடை போட முடியாமல், ட்ரை-சைக்கிளை உருட்டி வந்து, நெருக்கடியான தெரு ஒன்றில் நிறுத்திவிட்டு,  ‘கீரை..கீரை..’ என்று கூவ முடியாமல், கோவில்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார், காளீ|ஸ்வரி. 

 

police

 

சுப்பம்மாள் நம்மிடம் “இந்த ரோட்டுக்கடை வியாபாரத்துல மிஞ்சிப்போனா ஒரு நாளைக்கு இருநூறு முன்னூறுன்னு கிடைக்கும். இந்த ரெண்டு நாளா அதுக்கும் வழியில்லாம போச்சு. இந்த வரும்படிய வச்சித்தான் சீட்டுப்பணம் கட்டிட்டு வந்தேன்.. மூணு வாரம் கடை போட முடியாதுன்னா தாங்கமாட்டேன் சாமி.” என்றார் பரிதாபமாக.

காளீஸ்வரி யதார்த்தமாகப் பேசினார். “கொரனான்னா என்ன எழவுன்னே தெரியல. வந்தா செத்திருவோம்னு சொல்லுறாங்க. தெருவுல உட்கார்ந்து இந்தமாதிரி லோல் படறதுக்கு செத்தாகூட தேவல. ரேசன் கார்டுக்கு ஆயிரம்கிறது எந்த மூலைக்கு? சரி, கொடுக்கிறத வாங்கிக்க வேண்டியதுதான். பணக்காரங்களுக்கு, படிச்சவங்களுக்கு எல்லா வெவரமும் தெரியும். ஆனா.. எப்ப சாவோம்னு யாருக்கும் தெரியாது. 

 

police

 

வெளிய போறப்ப முகமூடி போட்டுக்கன்னு என் பொண்ணு சொல்லுறா. வாழவேண்டிய நீ போட்டுக்கம்மான்னு சொன்னேன். அதுக்கு அவ, கொரோனா வந்து நாம மட்டும் செத்தா பரவாயில்ல. மத்தவங்களுக்கு பரப்பிடக் கூடாதுன்னு கோவிச்சுக்கிட்டா. எங்க வீட்ல இருக்கிறதே ஒரு முகமூடிதான். மருந்துக்கடைக்கு போயி இன்னும் ரெண்டு வாங்கிட்டு வரச் சொல்லிருக்கேன்.

அப்புறம் ஒரு விஷயம், எங்க வீட்டுக்கு எதிர்வீட்ல ஒரு குடும்பம். அந்த மனுஷன் எப்பவும் வீடு தங்க மாட்டாரு. இப்ப பார்த்தா.. வீட்டுக்குள்ள  டிவி சவுண்ட கூட்டி வச்சு குதியாட்டம் போடறாரு. புள்ளைங்களும் அவருகூட சேர்ந்து ஆடுதாம். அந்த வீட்டுக்காரம்மா சொல்லிச் சொல்லி சிரிச்சாங்க.  டிவில அந்த நாட்டுல அத்தனை பேரு செத்தாங்க. இந்த நாட்டுல இத்தனை பேரு குணமாயிருக்காங்கன்னு காட்டிக்கிட்டே இருக்காங்க. எங்கே பார்த்தாலும், உசிர கையில பிடிச்சிக்கிட்டு மக்கள் பயந்து கிடக்கிறாங்க. ஆனா.. எங்க எதிர்விட்டுக்காரங்க மாதிரி கொஞ்சபேரு இப்பத்தான் வாழ ஆரம்பிச்சிருக்காங்க.” என்று தத்துவம் பேசினார்.

கரோனா கொடியது என்றாலும், வாழ்வியலுக்கான அர்த்தத்தை சத்தமில்லாமல் பலருக்கும் கற்றுத்தந்த வண்ணம் உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.