Skip to main content

சிலிண்டர் வெடித்ததில் வீடு சேதம்! உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர்!

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் புத்தர்தெருவைச் சேர்ந்த  ரவி என்பவரது வீட்டின், பக்கத்தில் வாடகை பாத்திர கடை  உள்ளது. இக்கடையில்  எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைக்க சென்ற பழனிவேல்(40), அசோக்குமார்(27), சிவபாலன்(40), பரமசிவம்(65), ஜான்(30), ஆகியோர் தண்ணீர் ஊற்றி அணைத்து கொண்டு இருந்தனர். அப்போது அருகில் இருந்த ரவி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ரவி உட்பட தீயை அணைக்க முயன்ற ஜந்து பேருக்கும் பலத்த தீ காயம் ஏற்பட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு, பெண்ணாடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

House damage in cylinder explosion 6 lives in a dangerous condition

 

House damage in cylinder explosion 6 lives in a dangerous condition

 

பின்பு மேல் சிகிச்சைக்காக ரவி, சிவபாலன், பழனிவேல் ஆகிய மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் சிலிண்டர் வெடித்து தீ பற்றியதில் வீடு தீக்கரையானது. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. 

சார்ந்த செய்திகள்