Skip to main content

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் அடாவடி... பொதுமேலாளர் வரை சென்ற புகார்!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

Government bus driver, operator Adavati ... Complaint that went up to the General Manager!

 

கடலூர் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கடந்த 9 ஆம் தேதி இரவு 9 மணியளவில் திருச்சி மத்தியபேருந்து நிலையத்திலிருந்து தொழுதூர் செல்வதற்காக சென்னை செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் இந்த பேருந்து தொழுதூர் செல்லாது பஸ்ஸை விட்டு இறங்குமாறு மிரட்டியுள்ளனர். அப்போது ஜெயராமன் சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் தொழுதூர் வழியாகத்தானே செல்லும் இந்த பஸ் மட்டும் ஏன் அங்கு செல்லாது என்று கூறுகிறீர்கள், இதென்ன என்ன விமானமா பறந்து செல்வதற்கு என்று எதிர்த்துக் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் சுந்தர்சிங், நடத்துநர் சுரேஷ் ஆகியோர் அடாவடித்தனமாக ஜெயராமனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பஸ்சை விட்டு கட்டாயப்படுத்தி கீழே இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து ஜெயராமன் விழுப்புரம் போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை-காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் பயணிகள் ஏறினால் தொழுதூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு செல்பவர்களுக்கு டிக்கெட் தராமல் கீழே இறக்கி விடுவதும், நீண்ட தூரம் செல்பவர்களை மட்டுமே பஸ்ஸில் ஏற்றுவது இல்லையேல் பயணிகளை நீண்ட நேரம் காக்க வைத்து, பஸ் புறப்படும் நேரத்தில் அவர்கள் நின்று கொண்டே பயணம் செய்ய வைப்பது, இப்படி அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் தொடர்ந்து அடாவடித்தனம் அராஜக செயல்களைச் செய்து வருகிறார்கள். அரசு போக்குவரத்துக் கழகம் 50,000 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே அரசு பேருந்துகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்கிறார்கள் ஜெயராமன் போன்று அடிக்கடி தங்கள் பணிகளுக்காக பல்வேறு ஊர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்வோர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.