Published on 14/01/2019 | Edited on 14/01/2019

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் தொடங்கியது. அரசு அனுமதியுடன் முறையான பாதுகாப்பு மற்றும் வழிமுறைகள் பின்பற்றி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று காலை தச்சங்குறிச்சி பகுதியில் தொடங்கியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதில் 800 காளைகளும், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்குபெற்றுள்ளனர்.