Skip to main content

விளையாட்டு விபரீதமான பரிதாபம்: மாணவன் உயிரிழப்பு

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நீச்சலடித்து கிணற்றில் விளையாடிக்கொண்டிருந்த மாணவனை விளைட்டுபோல தண்ணீரில் அமுக்கி பிடித்ததால் பரிதாபமாக பலியாகியுள்ளான் அந்த மாணவன்.

 

பெருந்துறை அருகே சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வரப்பாளையம் ஊராட்சியில் குடிருந்துவருபவர்  பாரதி இவரது மகன் பாலமுருகன், 13 வயது இவன் வரப்பாளையம் அரசு உயர்நிலைபள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து விடுமுறையில் உள்ளான்.

 

Critical Game:student's death

 

மேற்படி இதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சதீஸ்(எ) கோபால் இவர் தனியார் பனியன் கம்பனி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி மாணவன் பாலமுருகனை காணவில்லை என அவரது பெற்றோரும் உறவினர்களும் தேடி வந்தனர்.

 

 

இந்நிலையில் அன்று மாலை மேற்கு சாணார்பாளையம் பூசாரிச்சிகாடு பகுதியில் உள்ள கிணற்றில் பாலமுருகன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையறிந்த பாலமுருகனின் தாயார் பாரதி பெருந்துறை காவல்நிலையத்தில் புகாரளித்தார். மாணவனின் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சதீஸ் என்ற கோபாலை விசாரணை செய்த போது, மாணவன் மரணம் குறித்த தகவல் வெளியானது. 

 

 

12ம் தேதியன்று பூசாரிச்சிகாடு பகுதியில் உள்ள கிணற்றில் மாணவன் பாலமுருகன், கோபால் உள்ளிட்ட 10க்கும் மேட்பட்டோர் நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கோபால் பாலமுருகனின் தலையை தண்ணீருக்குள் அமுக்கி பிடித்து விளையாடியிருக்கறார் அப்போது எதிபாராத விதமாக பாலமுருகன் முச்சு திணறி கிணற்றுக்குள் மூழ்கிவிட்டார். இந்த தகவலை கோபால் பாலமுருகன் பெற்றோரிடம் மறைத்துவிட்டார்.

 

 

பின்னர் தீயணைப்புதுறை வீரர்களின் உதவியோடு மாணவன் சடலத்தை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோபாலை கைது செய்த போலீசார் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருத்தல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

விளையாட்டு வினையாகி ஒரு மாணவன் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.