Skip to main content

இந்தி திணிப்பை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போராடும்; ஜவாஹிருல்லா பேட்டி

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

இந்தி திணிப்பை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி சளைக்காமல் போராட்டம் செய்யும் என்றார் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜவாஹிருல்லா.
 

கும்பகோணம் சென்னை சாலையில் அணைக்கரை அருகே உள்ள தத்துவாஞ்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்,
 

 fights against the imposition of Hindi; Interview with Jawahirullah

 

"தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுதேர்வு நடைபெறும் என தமிழக அரசாணை மூலமாக தெரிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 5 மற்றும் 8 ஆம்வகுப்பு வரை அரசு தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வு அறிவித்துள்ளதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மோடி அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோதமான திட்டங்களை வரவேற்கின்றனர். அத்துடன் ஒரே நாடு, ஒரே ரேசன், பள்ளி கல்வி திட்டம் போன்ற தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கின்றது. இது வேதனையான விஷயம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அண்ணாவின் படத்தை அகற்றி விட்டு, மோடிதான் எங்களின்  டாடி என்று சொல்கிறார். இது எவ்வளவு பெரிய கொடுமை. அதிமுக தொண்டர்கள் இன்னும் அவர்களை நம்புவதுதான் வேதனையின் உச்சம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என காயிதேமில்லத், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செப். 14 ந்தேதி கூறினார். ஆனால் அதே செப்.  14 ந்தேதி, 70 ஆண்டுகளுக்கு பிறகு அமித்ஷா, இந்தி  மொழியைதான் ஆட்சி மொழியாக்குவோம், இந்தி மொழியை கற்றால் தான் நாடு வளர்ச்சி பெறும் என்கிறார். அவரது கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே மொழி என்பது ஆர்எஸ்எஸ் திட்டம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் பன்முகத்தன்மை ,கலாச்சாரம் சிதையும். இந்தி மொழியை, இந்தி திணிப்பை  கட்டாயப்படுத்தினால், அதனை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து  மனித நேய மக்கள் கட்சி சளைக்காமல் போராட்டத்தில் ஈடுபடும்," என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .