Skip to main content

'திமுகவில் யார் காலிலும் விழுந்து முதல்வராக முடியாது'- பொன்முடி பேச்சு!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

dmk ponmudi speech in villupuram

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய பொன்முடி,

 

''திமுகவில் காலில் விழுந்து எல்லாம் முதல்வராக முடியாது. திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அப்படி நீட் தேர்வை ரத்து செய்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் என இங்குள்ள அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஸ்டாலின் மீது குறை கூறுவதை மட்டுமே ஆளுங்கட்சியினர்கள் கொள்கையாக வைத்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு நீக்கப்பட்டு நிச்சயமாக மருத்துவ படிப்பிற்கு  பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சீட்டு வழங்குவதோடு, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும் தொடரும்.

 

dmk ponmudi speech in villupuram

 

அரசியலுக்குள் குடும்ப வாரிசுகள் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் அரசியல் பிடிப்போடும், கட்சியின் கொள்கை பிடிப்போடும், மக்களுக்கான பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுகிறார்களா என்பதுதான் முக்கியம். உதயநிதி ஸ்டாலின் தற்போது அது போன்ற கொள்கை பிடிப்போடு உள்ளார். அதனடிப்படையில் கட்சியின் கொள்கைகளை கடைப்பிடித்து பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவில் காலில் விழுந்து எல்லாம் முதல்வர் ஆகிவிட முடியாது. இந்தக் கட்சியில் உழைப்பவர்களின் நியாயமான வளர்ச்சியை கொண்டுதான் தலைமை முடிவு எடுக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவிதமான மக்கள் நலப் பணிகளும் நடைபெறவில்லை. விழுப்புரத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. புதிய பஸ் நிலையத்தில் கழிவுநீர் வெளியேற வழியில்லை. நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டபிறகு அப்பகுதிகளில் சாலை வசதி இல்லை. மரக்காணத்தில் துறைமுகம் கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதுவும் வரவில்லை. அதேபோன்று விழுப்புரம் பகுதியில் தொழிற்சாலை உள்ளிட்ட எந்த வளர்ச்சித் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. எனவே இந்த ஆட்சியை தமிழக மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க தயாராக உள்ளனர்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.