Skip to main content

மருத்துவர் ராமதாஸ், பா.ஜ.க. சீனிவாசன் மீதான திமுக அவதூறு வழக்கு! - மனு விசாரணைக்கு ஏற்பது தள்ளிவைப்பு

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

பஞ்சமி நில விவகாரத்தில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மீது எழும்பூர் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 5-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

dmk defamation case in chennai court

 

 

பஞ்சமி நில விவகாரம் :

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அசுரன் படத்தில் பஞ்சமி நில விவகாரம் குறித்து பேசப்படுவதைச் சுட்டிக்காட்டி, இது படம் அல்ல, பாடம் என்று கூறியிருந்தார்.

அதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான். அதை மு.க.ஸ்டாலின் திருப்பி கொடுப்பாரா? என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்து விட்டால், நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் ராமதாசும், அன்புமணியும் அரசியலை விட்டு விலகுவார்களா? என்று கேள்வி எழுப்பி முரசொலி நிலத்துக்கான பட்டாவையும் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

இந்தக் கருத்து மோதலைத் தொடர்ந்து,  பட்டா வெளியிட்டால் போதுமா? மூலப்பத்திரம் எங்கே? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு மு.க.ஸ்டாலின், மூலப்பத்திரத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் சமர்ப்பிப்பேன் என்றார். பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் இடையே கருத்து மோதல் நீடித்து வந்தது.

இதற்கிடையே பா.ஜ.க. மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக நீதியின் சாம்பியன்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் தி.மு.க. பட்டியல் சாதி மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால் அவர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது என்று கூறி இருந்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் அவர் புகார் மனு கொடுத்தார்.

அவதூறு வழக்கு தாக்கல்:

இந்தநிலையில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை எழும்பூர் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில், டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்திலும், பா.ஜ.க. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தனது முகநூல் பக்கத்திலும் தி.மு.க. மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி இருப்பது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர்கள் இருவரையும் அவதூறு குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவைச் சரிபார்த்து, விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக அறிவிக்க 5-ஆம் தேதிக்கு எழும்பூர் கோர்ட் தள்ளிவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.