Skip to main content

பக்தர்கள் வெள்ளத்தில் முத்தாலம்மன் கண் திறப்பு!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் திருக்கோவிலுக்கு அடுத்தப்படியாக தாடிக்கொம்பில் உள்ள அகரம் முத்தாலம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 


இந்த முத்தாலம்மன் திருக்கோவில் அகர முத்தாலம்மன் இச்சை. கிரியை. ஞானம் என்ற மூன்று அம்சத்தில் கையில் அட்சய பாத்திரத்துடன் நின்ற திருக்கோலத்தில் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறார். கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகப்பு மண்டபங்கள் ஆகி அமைப்புடன் திருச்சுற்று பிரகாரத்துடன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருச்சிற்றம் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகா சிவலிங்கேஸ்வரர் ஸ்ரீ விசாலாட்சி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ துர்க்கை நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
 

அந்த மண்டபத்தில் கன்னி மூலையில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். காவல் தெய்வமாக ஆண் ஒன்றும் பெண் போதும் ஒன்றும் பிரகாரத்தில் பெரிய சிலைகளாக அமைந்துள்ளன. இக்கோயில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருக்கோவிலில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலை பரிபாலனம் செய்த சக்கராயர் சந்ததிகள் தாம் பலரிடம் பெற்ற கடனுக்காக திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மன்றத்தில் இத்திருக்கோயில் டிகிரி ஆகியுள்ளது.

DINDIGUL TEMPLE FESTIVAL


இப்போதைய அறங்காவலர்கள் முன்னோர்களின் 14 பேர் சக்கராயரின் சந்ததிகள் வாங்கிய கடன் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்தி கோவில்களையும் அதன் உரிமைகளையும் 1898 ஆம் ஆண்டு மே மாதம் 26- ஆம் தேதி திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதன் மூலம் சுத்த கரையும் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து கிரையம் பெற்ற 14 வாரிசுகளும், இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகின்றன அவர்களுடைய பராமரிப்பின் கீழ் திருக்கோவில் 1990ஆம் ஆண்டு மற்றும் 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி முதல் முதல் வாரத்தில் திருவிழா நடப்பது வழக்கம் அதுபோல தான் கடந்த 10- ஆம் தேதி கண்திறப்பு மண்டபத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 14- ஆம் தேதி முதல் நாள் தோறும் இரவு கோவிலில் இருந்து பண்டார பெட்டியும், அம்மன் உற்சவரும், கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக இன்று முத்தாலம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி அம்மனின் ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலுமண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை செவ்வாய்க்கிழமை அம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் விழாவும் மிக
சிறப்பாக நடைபெற உள்ளது.


இந்த அகர முத்தாலம்மன் கண் திறப்பை காண தாடிக்கொம்பு சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு முத்தாலம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியை தரிசித்து விட்டு சென்றனர். முத்தாலம்மன் திருக்கோவிலின் திருவிழா ஏற்பாட்டை பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என பொதுமக்களுடன் பலரும் கலந்து கொண்டு முத்தாலம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.