Skip to main content

கரோனா! குணமாகாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்ட முதியவர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
 corona

 

 

கடலூரை அடுத்த கோண்டூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதி நகரைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் கடந்த 20-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரிடமிருந்து உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

 

இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 

 

ஆனாலும் தொடர் சிகிச்சைக்கான வசதி இல்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பட்டு அங்கும் போதுமான வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 24-ஆம் தேதி அங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு 26-ஆம் தேதி வரை அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 28-ஆம் தேதி மாலையும் சற்று மூச்சுத்திணறல் இருந்த நிலையில், அவருக்கு கரோனா முழுமையாக குணமடைந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பினர். அனுப்பும்போது வாகனம் கூட ஏற்பாடு செய்யாததால் மேல் மாடியிலிருந்து நடந்தே கீழே வந்து வாடகை வாகனம் மூலம் வீட்டுக்கு வந்துள்ளார். 

 

இந்நிலையில் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் அதிகமாக ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த முதியவரின் குடும்பத்தினர்கள் கடலூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதியவர் பூரணமாக குணமடைவதற்கு முன்பு மருத்துவ மனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதால்தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு காரணம் ஏதாவது உண்டா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதனிடையே 28-ஆம் தேதி இரவு உயிரிழந்தவரின் சடலம் 29-ஆம் தேதி காலை 10 மணி வரை பாதுகாப்பாக மூடி வைக்கவும் இல்லை, அடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என புகார் கூறும் அப்பகுதி மக்கள் இதனால் தொற்று பரவும் என அச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.