Published on 02/05/2023 | Edited on 02/05/2023

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது. இந்தக் கூட்டத்தில், நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.