Skip to main content

பெண்களை குறிவைக்கும் ஆட்டோ ஓட்டும் பெண்... சென்னையில் பதற வைத்த சம்பவம்!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

பெண்களை குறிவைத்து திருடி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா இவர் மாலை நேரத்தில் வழக்கம் போல் காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கு தனியே சென்றுள்ளார். காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அவரை ஒரு ஆட்டோ பின் தொடர்ந்து வந்துள்ளது. பின்னல் ஆட்டோ வருவதை பார்த்த சர்மிளா சற்று ஓரமாக சென்றுள்ளார். அப்போது திடிரென்று ஆட்டோவில் இருந்து ஒரு பெண் அவருடைய கைப்பையை பறித்து கொள்ள ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. 
 

auto driver

தனது கைப்பை திருடு போனதை உணர்ந்த சர்மிளா உடனே கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு கூப்பிட அங்கிருந்தவர்கள் உடனே திரண்டு ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆட்டோவை பிடித்த உடன் ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பின்பு ஆட்டோவில் இருந்த பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழிப்பறி செய்த பெண்ணிடமிருந்து சர்மிளாவின் கைப்பையை சர்மிளாவிடம் ஒப்படைத்தனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   திருடிய  பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவரது பெயர் அர்ச்சனா என்பது தெரியவந்தது. அவர் புளியந்தோப்பில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

இந்நிலையில் இது குறித்து அர்ச்சனாவிடம் மேலும் விசாரணை நடத்திய போது, ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனிமையாக பேசி அவர்களை வழிப்பறியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுத்து வருவதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடிவந்தனர். அந்த ஆட்டோ ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்று கண்டு பிடித்தனர். பின்பு பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் கொள்ளை குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.