Skip to main content

ஆரணி ஆற்றில் வெள்ளம்... ஊத்துக்கோட்டையில் தரைப்பாலம் துண்டிப்பு!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Arani river floods

 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றின் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

 

தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று (07.11.2021) 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று அந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை வந்து சேர்ந்துள்ளது. அதேபோல் நந்தனம் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப்பகுதி மக்கள் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்