Skip to main content

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
serial


சென்னை வளசரவாக்கத்தில், தனியார் தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை பிரியங்கா (32). தனியார் தொலைக்காட்சிகளில் சின்னதிரையில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பல வருடங்களாகியும் குழுந்தை இல்லாததால் கணவரின் குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பிரியங்கா இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியாங்காவின் தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்