Skip to main content

நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதிலளிக்க உத்தரவு

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
nalini

 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை விடுவிக்கும்போது சிபிஐ விசாரித்தவர்களை விடுவிக்க முடியாது என்ற சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் கொலையாளி நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற்ம் உத்தரவிட்டுள்ளது.

 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 முதல் 20  ஆண்களுக்கு மேலாக  சிறையில் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதையடுத்து  பிப்ரவரி 1 ஆம் தேதி  அரசாணையும்  வெளியிட்டப்பட்டது. 

 

அந்த அரசாணையில் இந்திய குற்றவியல் விசாரணை  நடைமுறைச் சட்டம் 435வது பிரிவின்  கீழ் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை எதிர்த்து, ராஜிவ் கொலை  வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில்  நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னனியையோ அல்லது விசாரணை அமைப்பையோ ஆராயக் கூடாது என்றும், முன் கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையில் பரபட்சம் இல்லாமல் அனைத்து கைதிகளையும் சமமாக கருத வேண்டும் என்றும் கூறியுள்ளார். எனவே அந்த அரசாணையில் 435 (1) (ஏ) பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம் என்பதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நளினி தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள சட்டப்பிரிவை ரத்து செய்யவேண்டும் என உள்ளதால், வழக்கு குறித்தும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தால் சரியாக இருக்கும் என கருதுவதாகவும், அதனால் 4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நளினி வழக்கு... அவசர அவசரமாக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம் கறார்!

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

Nalini case; "Can't be heard in haste" Supreme Court

 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் மே 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மீதமுள்ளவர்களும் விடுதலை ஆகச் சட்டத்தில் வழி ஏற்பட்டது. 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர்.  இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் முடிவிற்குத் தமிழக அரசு கட்டுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை அடுத்து மீதமுள்ள ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் விடுதலை கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் ஐந்து பேரின் வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது. 

 

வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனு மீதான விசாரணையைத் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

 

 

Next Story

நளினி தாக்கல் செய்த மனு... விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதிகள்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

 Judges who adjourned the hearing in nalini's petition

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன் உள்பட ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக செப்டம்பர் 11ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அதில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்துவைத்திருப்பதாக அறிவிக்க வேண்டும். கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கிற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு, அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஏழு பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளார். எனவே, நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று (29.11.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன், “தமிழக கவர்னரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது. நளினியை விடுதலை செய்ய கவர்னரின் ஒப்புதல் தேவையில்லை. ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை 39 மாதங்களாக நிலுவையில் உள்ளது” என்று வாதிட்டார். 

 

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், “பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது” என்றார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கூடுதல் பதில் மனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். தன்னை மூன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிசந்திரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் முடிவைப் பார்த்த பிறகே இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதற்கு தமிழ்நாடு அரசு மூன்று வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.