Skip to main content

"முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்" - மக்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

modi  launches ‘Atma Nirbhar Uttar Pradesh Rojgar Abhiyan'

 

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டறியும் வரை மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 

கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலான ஆத்மநிர்பார் உ.பி. ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "நான் அனைவருமே நம் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருப்போம். பிரச்சனைகளும் இருக்கவே செய்யும். ஆனால் இப்படி ஒரே சமயத்தில் அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையை உலகம் எதிர்கொள்ளும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தச் சிக்கலிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பது தெரியாது. ஆனால், கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் வரையில், மக்கள் அனைவரும் பொதுவெளியில் இரண்டு கஜம் அளவு சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  

 

கரோனா வைரஸ் காலத்தில் உ.பி. தைரியத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்தது. அது கரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் எதிர்கொண்ட விதம் சிறப்பானது. உலகின் பல நாடுகளை விட உ.பி. பெரியது. கரோனாவின் போது உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட கடின உழைப்பைப் பார்க்கும்போது, அது குறைந்தது 85,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று சொல்லலாம். உ.பி.யில் 2017க்கு முன்னர் இருந்த அரசாங்கம் இயங்கிய விதத்தில் இந்த முடிவுகளை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. முந்தைய அரசாங்கங்கள் இருந்திருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகளைக் காரணமாகக்கூறி இந்த மிகப்பெரிய சவாலைத் தவிர்த்திருக்கும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.