Skip to main content

சிக்கிமில் நிலச்சரிவு; 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Published on 02/06/2025 | Edited on 02/06/2025

 

Landslide in Sikkim; 3 army personnel lost his life

சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 9 பேரைக் காணவில்லை என்றும்  தகவலும் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குவஹாத்தி பாதுகாப்புத் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், “வடக்கு சிக்கிமின் சாட்டனில் நேற்று (01.06.2025) இரவு 07:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு அருகில் இருந்த மக்களின் வாழ்விடத்தையும், ராணுவ முகாம்களையும் சேதப்படுத்தியது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 ராணவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஹவால்தார் லக்பிந்தர் சிங், லான்ஸ் நாயக் மினிஷ் தாக்கூர் மற்றும் போர்ட்டர் அபிஷேக் லகாடா ஆகிய 4 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்களை அடையாளம் காணும் செயல்முறை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதே சமயம் காணாமல் போன 6 பணியாளர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்கு மீட்புக் குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். சிக்கிமில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு ராணுவ முகாம் உள்ளிட்ட மக்கள் வாழிடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்