Skip to main content

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல்

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

jai shankar submit report on Rescue of Indians from Ukraine

 

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார்.

 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியிருந்த நிலையில், ஆபரேஷன் கங்கா மூலம் அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்துவரப்பட்டனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டது தொடர்பான அறிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

 

உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களை அண்டை நாடுகள் மிகுந்த மதிப்புடன் நடத்தியதாகவும், கடும் சவால்களுக்கு இடையே 22,500 இந்தியர்கள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் உயிரிழந்த கார்நாடகாவைச் சேர்ந்த மாணவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஐ.நா எங்களுக்கு சொல்ல தேவையில்லை” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Union Minister Jaishankar says We don't need the UN to tell us

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே வேளையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த சோரன் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகியவற்றை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், இந்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு, இந்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்தியா நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில், ஐ.நா சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டீபன் டுஜாரிக், “இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும், அரசியல் மற்றும் சமூக உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்” என்று கூறினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “எங்களுடைய தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை. எங்களிடம் இந்திய மக்கள் உள்ளனர். இந்திய மக்கள் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வார்கள். எனவே, அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார். 

Next Story

“தமிழக முதல்வருக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்” - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Union External Affairs Minister criticizes Mk stalin about katchatheevu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி நேற்று (31.03.2024)  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது. மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது குறித்து காங்கிரஸ் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த 1961 மே மாதத்தில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ‘இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதன் மீதான எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும், மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை’ என்று ஒரு முறை பேசினார். 

இதில் இருந்து நேரு, இந்த குட்டித் தீவை ஒரு தொல்லையாகப் பார்த்தார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பார்வை இந்திரா காந்திக்கும் இருந்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் திடீரென தலைதூக்கவில்லை. பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை. அடிக்கடி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டும் காங்கிரஸும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை எந்தப் பொறுப்பும் ஏற்காதது போல அணுகின.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சனைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பது தான் உண்மை” என்று கூறினார்.