Published on 16/06/2021 | Edited on 16/06/2021

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி கோவிஷீல்ட் முதல் தடுப்பூசி செலுத்தியவர்கள் கல்வி, வேலை போன்ற அத்தியாவசியப் பணிகளுக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டால், அவர்கள் 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.