Skip to main content

கையை விட்டு போன முதல்வர் பதவி... வீடு தேடும் பட்னாவிஸ்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

மாகாராஷ்டிர முதல்வராக இரண்டாவது முறையாக நான்கு நாட்களுக்கு பதவி வகுத்த பட்னாவிஸ் மும்பையில் வாடகைக்கு வீடு தேடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  நாக்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பின்னர் மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் முதல்வர்கள் வசிக்கும் பங்களாவான வர்சாவில் வசித்து வந்தார். 



இந்நிலையில் மகாராஷ்டிர அரசியலில் நடந்த அதிரடி திருப்பங்களால் முதல்வர் பங்களாவை காலி செய்கிறார். இதனால் மும்பையில் வேறு பொரு வாடகை வீடு தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடு தேடும் அவர் மீது தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம்; தேவேந்திர பட்னாவிஸ் வகித்த துறைகள் அஜித் பவாருக்கு ஒதுக்கீடு

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Maharashtra cabinet reshuffle Depts held by Devindra Patnavis have been allotted to Ajit Pawar

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

 

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது.

 

அதனைத் தொடர்ந்து அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

 

இந்நிலையில் தற்போது அஜித் பவாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் கவனித்து வந்த நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனில் பாட்டீலுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மை துறையும், அதிதி சுனில் தட்கரேக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையும், தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயத் துறையும், திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அமைச்சர்களாகப் பதவியேற்ற 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

 

 

Next Story

"ஒருவர் சாவர்க்கராக இருப்பதற்கு தியாகம் செய்ய வேண்டும்" - துணை முதல்வர்

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

maharashtra deputy cm devendra patnavis talks about savarkar

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

 

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்த எனது பேச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை" என்றார். இதனைத் தொடர்ந்து உங்களின் பேச்சுக்கு பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், “எனது பெயர் சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி.. காந்தி ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டான்” என்றார்.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற சவர்க்கார் கவுரவ பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "சாவர்க்கரை இழிவுபடுத்துவது என்பது அவரது அந்தஸ்தை குறைக்கவில்லை. இதன் மூலம் அவரை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் வாய்ப்பை பெற்றோம். ஒவ்வொரு வீட்டிற்கும் உண்மையை எடுத்துச் செல்ல எங்களுக்கு வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், சாவர்க்கருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். இதனை ராகுல் காந்தி தொடர வேண்டும்" என்று பேசினார்.

 

maharashtra deputy cm devendra patnavis talks about savarkar

 

மேலும் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி கூறுகிறார். நீங்கள் சாவர்க்கராகவோ, காந்தியாகவோ இருக்க முடியாது. ஒருவர் சாவர்க்கராக இருப்பதற்கு தியாகம் செய்ய வேண்டும். அந்தமான் சிறையில் நம் கழிப்பறை அளவு மட்டுமே உள்ள அறையில் சாவர்க்கார் அடைத்து வைக்கப்பட்டார். அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. ஒரு நாள் இரவு மட்டும் அந்த அறையில் ராகுல் காந்தி தங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக அந்த அறையில், நாங்கள் ஏசியை கூட வைத்து தருகிறோம். ஆனால் உங்களால் அது முடியாது" என்று பேசினார்.