Skip to main content

ரஜினியின் அரசியல் பிரவேசம்! யார் அந்த அர்ஜூன்மூர்த்தி? 

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Rajini - Arjun Murthy

 

அரசியலுக்கு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்பேன் என்று சமீபத்தில் மனம் திறந்த ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 


ரஜினியின் இந்த அறிவிப்பு, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை தொடர்புகொண்டு வாழ்த்துகள் தெரிவிக்க அரசியல் வி.ஐ.பி.க்களின் கியூ நீண்டு கொண்டிருக்கிறது. 

 

கட்சித் துவக்கவிருப்பதை அறிவித்த கையோடு, தனது ரசிகர் மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவை சேர்ந்த அர்ஜுன்மூர்த்தி என்பவரை நியமித்துள்ளார் ரஜினி. இந்த அறிவிப்பை தொடர்ந்து, யார் அந்த அர்ஜுன் மூர்த்தி எனப் பரபரத்துக் கிடக்கிறது ரஜினி மக்கள் மன்றம்.


அதேசமயத்தில், அவரது நியமனம் சில விமர்சனங்களையும் எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கிறது. 


இது குறித்து விசாரித்த போது, "மறைந்த முரசொலி மாறனின் சிஷ்யர்தான் இந்த அர்ஜுன் மூர்த்தி. கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணியின் நெருங்கிய நண்பர். மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனின் நெருங்கிய உறவினர். திமுக குடும்பத்தில் உறவுரீதியாகக் கோலோச்சியவர் இந்த அர்ஜுன் மூர்த்தி. மேலும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பிஸ்னெஸ் பார்ட்னராகவும் இருந்திருக்கிறார்" என்று அர்ஜுன் மூர்த்தியின் பின்னணியை விவரிக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர், "தி.மு.க குடும்பத்தோடும், பா.ஜ.க கட்சியில் இருந்தவருமான அவரை, மக்கள் மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளராக நியமித்திருப்பது... பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ரஜினி எடுக்கும் முடிவுகள், ரகசியங்கள் எதிர் முகாம்களுக்குச் செல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர். 

 

இதற்கிடையே, இன்று மதியம் வரை பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராகவும் இருந்த அர்ஜுன் மூர்த்தியைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன். மேலும், நேரடி அரசியலுக்கு ரஜினி வரக்கூடாது என விரும்பிய தி.மு.க தலைமை, ரஜினியுடன் முக்கிய இடத்தில் அர்ஜூன் மூர்த்தி இருப்பதை மகிழ்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது!.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.