Skip to main content

7 பேரின் விடுதலை தமிழக அரசின் கொள்கை முடிவு: கடம்பூர் ராஜூ

Published on 16/06/2018 | Edited on 16/06/2018


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கொள்கை முடிவு என விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் அதிருப்பதி தெரிவித்து வந்த நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது மகனை கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

மேலும் மகாத்மா காந்தியை கொன்றவரையே 14 ஆண்டுகளில் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் தவறே செய்யாத பேரறிவாளன் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருவதாக அற்புதம்மாள் வேதனையுடன் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கொள்கை முடிவு. குடியரசு தலைவர் ஏன் நிராகரித்தர் என்பது பற்றி தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பேரறிவாளன் (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான, சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடலைக் காண நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்