Skip to main content

அமைச்சர் பதவி நீக்கம்; அடுத்தடுத்து நடந்த முக்கிய திருப்பங்கள்; முதல்வர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன? -  விரிவான பார்வை

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

tamil nadu chief minister and governor - Senthil Balaji Issue

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

 

ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று சொல்லி அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டதாக ஒரு அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென வெளியிட்டார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இருக்கும்போது, அதன் முதலமைச்சருக்கான அதிகாரத்தில் குறுக்கிட்டு ஆளுநர் அமைச்சர்கள் விவகாரத்தில் தலையிடுவதா? என பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் அறிவிப்பு வெளியானதும், அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உடனடியாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் நீதித்துறையை சேர்ந்தவர்களும் ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

 

ஆளுநரின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஆலோசனை செய்ததாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து விட்டு பிறகு முடிவெடுத்துக் கொள்ளாலாம் என்று அறிவுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தொடர்ந்து வரும்  மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் முதல்வர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன? மாநில அரசின் அல்லது முதல்வரின் அதிகார வரம்பிற்குள் ஆளுநர் தலையிட முடியுமா போன்ற விவாதங்கள் எழும்பத் தொடங்கி இருக்கிறது. முதல்வர் மற்றும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொண்டால் தான் மேற்கண்ட விவாதங்களுக்கு நமக்கு விடை கிடைக்கும்.

 

மாநிலத்தில் நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் கண்காணிப்பில் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். எனவே, ஆளுநர் பெயரளவிலான தலைவராக மட்டுமே செயல்படுவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'பிரிவு 164' மாநில அமைச்சர்களின் நியமனம் குறித்துக் குறிப்பிடுகிறது. அதன்படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிப்பார். மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிப்பார்.

 

அரசு அலுவல் விதியின் கீழ், முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சரே மாற்ற முடியும். அதேபோல, குறிப்பிட்ட நபரை துறை இல்லாத அமைச்சராகத் தொடர வைக்கவும் முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. இலாகா ஒதுக்குவதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கத் தான் முடியும், நிராகரிக்க முடியாது. முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் 2-ஆவது முறையாக நிராகரித்தால் மாநில அரசே அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். முதலமைச்சர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லலாம். சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் எந்த நேரத்திலும் ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியும்.

 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே சட்டமாகும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடர் இல்லாத நேரத்தில், அரசின் பரிந்துரையின் பேரில் அவசரச் சட்டங்கள் இயற்றவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

 

முதலமைச்சர் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில ஆளுநரிடம் விசாரணை அமைப்புகள் அனுமதி பெறுவது அவசியம். ஆனால், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் எதையும் ஆளுநர் மீது அவர் பதவியில் இருக்கும் காலத்தில் யாரும் தொடர முடியாது என்பதுதான் முதல்வர் மற்றும் ஆளுநருக்கான அதிகார வரம்பாக அரசியல் சாசனம் சொல்லி இருக்கிறது. எனவே, மேற்கண்ட விதிகளின்படி பார்த்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் சட்டப்படி தவறானது என்பதாலேயே ஆளுநர் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

 

ஆளுநர் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு அரசில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆளுநரின் திட்டம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எனவே, ஆளுநரின் இந்த மோதல் போக்கை திமுக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.

 

- எஸ்.செந்தில்குமார்

 

 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.