Skip to main content

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்: ஜோதிமணி பேட்டி 

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

rahulgandhi


முதலில் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்றும். தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும், தனக்கு பிரதமர் ஆக வேண்மென்ற ஆசையோ லட்சியமோ இல்லை. கூட்டுத் தலைமையை ஏற்படுத்தலாமா? என்று நன்கு ஆலோசித்து வருகிறோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதில் முழு வடிவம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிவரும் நிலையில் மம்தா பானர்ஜி, தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யலாம் என கூறியிருப்பது கூட்டணி முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியிடம் கேட்டோம்.

 

அதற்கு அவர் கூறியது…

 

தற்போது எதிர்க்கட்சிகள் நினைப்பது பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மோடி என்கிற தோல்வி அடைந்த பிரதம மந்திரி இந்த நாட்டை பொருளாதார அடிப்படையில் இருபது வருடங்களுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளார். ஐம்பது ஆண்டுகள் சமூக அடிப்படையில் பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளார். இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாக இருக்கிற ஆட்சியை, அந்த ஆட்சியின் தலைமையை அகற்ற வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும், மற்ற எதிர்க்கட்சிகளும் நினைக்கின்றன. 

 

 

 

பாஜகவையும், மோடியையும் அகற்றினால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். மிக ஆபத்தானவர்களின் கைகளில் இந்தியா இருக்கிறது. அதனை மக்கள் உணர்ந்துள்ளனர். 2014ல் பாஜகவுக்கு வாக்களித்த 31 சதவீதத்தினரில் பெரும்பாலானோர், தற்போது பாஜகவுக்கு எதிராகத்தான் உள்ளனர். இப்பொழுது பாஜகவுடன் தன்னை சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்வதே கூட தவறான விஷயமாகக் கருதப்படுகிறது. அதனால் தான் தெலுங்கு தேசம், சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விலகி ஓடுகின்றன.

 

தனக்கு பிரதமர் ஆக வேண்மென்று எந்த ஆசையும், லட்சியமும் இல்லை. எனது முதன்மையான நோக்கம் என்னவென்றால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் என மம்தா பானர்ஜி வெளிப்படையாக சொல்லிவிட்டார். அந்த முடிவை அவர் தெளிவாக எடுத்ததால்தான் நேற்று அவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திதுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் பிரதமர் வேட்பாளர்தான். அதில் என்ன சந்தேகம். அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். இதனால்தான் பிரதமர் ஆக வேண்டுமென்று தனக்கு ஆசையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

jothimani congress

2004ல் பாஜக அத்வானியை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டது. அப்போது காங்கிரஸ் கட்சி யாரையும் முன்னிறுத்தவில்லை. ஆனால் சோனியாகாந்திதான் கூட்டணியை முன்னின்று வழிநடத்தினார். மக்கள் சோனியா காந்திதான் பிரதமராவார் என்று முடிவெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவரோ அவரே பிரதமர் வேட்பாளர் என்று மக்கள் முடிவு எடுத்தனர். அதன்பிறகு சோனியா காந்தி தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று முடிவெடுத்து மன்மோகன் சிங்கை பிரமராக்கினார். 

 

இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி என்பதை தாண்டி, இரு தலைவர்களுக்கிடையேயான போட்டி என வந்துவிட்டது. இது பாராளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இப்படித்தான் நடக்கிறது. பல மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் முதல் அமைச்சர் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

 

 

 

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் உள்ளது. பாஜகவை நேரடியாக பல மாநிலங்களில் எதிர்க்கொள்கிற கட்சி என்கிற முறையிலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் மனதில் உள்ள கட்சி என்கிற முறையிலும், காங்கிரஸ் கட்சித்தான் கூட்டணி கட்சிகளை வழி நடத்த முடியும். இதனை பல கூட்டணிக் கட்சித் தலைவர்களே சொல்லிவிட்டனர். பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியும் இதனை உணர்ந்துவிட்டது. ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியும் விரைவில் இதேபோல் வெளியேறும் என்றார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.