Skip to main content

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மேலும் ஒரு புதிய வீடியோ! எடப்பாடி அதிர்ச்சி!  

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

பொள்ளாச்சி நகரத்திலிருந்து அம்புராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை தேசியப் புலிகள் சரணாலயம் வழியாக டாப் ஸ்லிப் எனப்படும் மலைஉச்சியை நோக்கிச் செல்லும் சாலை ஒன்று உள்ளது. இயற்கை எழில் மிகுந்த பொள்ளாச்சியை தொட்டபடி மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் ஆழியாரை அணைத்தவாறு அமைந்துள்ள இந்தச் சாலை இயற்கை அழகுமிக்கது.

 

admk



இங்கு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு கோட்டூர் மலையடிவாரம், பெரியபோது, வாழைக் கொம்பு நாகூர், அப்பே கவுண்டன்புதூர், மச்சநாயக்கன் பாளையம், செம்மனாம்பேரி, சேத்து மடை, ஆழியார், ஆனைமலை ஆகிய ஊர்களில் தங்கும் விடுதிகள் இயங்கிவருகின்றன. பொதுவாக தங்கும் விடுதிகளை அமைக்க பதிமூன்று அரசுத் துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும். காவல்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை மலை மேம்பாட்டுக் கழகம், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகளை யாரும் நடத்த முடியாது.
 

subbiah



இந்தத் துறைககளின் அனுமதி எதுவும் பெறாமல் வனத்துறை, பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஆற்றுப்படுகை ஆகியவற்றை ஆக்கிரமித்து 42 விடுதிகள் செயல்படுகின்றன என 2004-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து மூடுவது உட்பட தக்க நட வடிக்கை எடுக்குமாறு நீதியரசர் வாசுகி தீர்ப்பளித்தார். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட காமவக்கிரங்களில் இந்த விடுதிகளுக்கும் பங்கு உண்டு என புகார் வலுவாக எழுந்தது. அந்தக் கொடூரங்கள் வீடியோ ஆதாரமாக வெளிவந்த பிறகு 04-05-2019 அன்று 150 கல்லூரி மாணவர்கள் சேத்துமடை பகுதியில் உள்ள, சட்டவிரோதமாக இயங்கிய விடுதியில் கோகெய்ன் என்கிற போதைப் பொருளை உபயோகித்தார்கள். அப்பொழுது நடந்த தகராறில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாணவர் உட்பட பலரை காவல்துறை கைது செய்தது. விடுதி மூடப்பட்டது.

 

pollachi issues



பொள்ளாச்சி வழக்கை விசாரித்துவரும சி.பி.ஐ.யிடம் திருநாவுக்கரசு போன்ற பொள்ளாச்சி காமக்கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர்கள் "இந்த விடுதிகளை உபயோகித்தோம்' என வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். இந்த விடுதிகளை சி.பி.ஐ. கண்காணித்து வந்ததோடு, பொள்ளாச்சி சம்பவங்களோடு இந்த விடுதிகளுக்குள்ள தொடர்பையும் விசாரிக்க சி.பி.ஐ. களத்தில் இறங்கத் தயாரானது. இதையறிந்த தமிழக அரசு, கோவை கலெக்டருக்கு "இந்த சட்டவிரோத விடுதிகள் மேல் சி.பி.ஐ.க்கு முன் நடவடிக்கை எடுங்கள்' என உத்தரவு வந்ததன் அடிப்படையில் கலெக்டர் ராஜமாணிக்கம், பொள்ளாச்சி வட்டார வளர்ச்சி அதிகாரியான ரவீந்திரனை களத்தில் இறக்கினார். ரவீந்திரன் இந்த சட்ட விரோத விடுதிகளுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சமூக சேவகர் காரமடை சுப்பையாவை தொடர்புகொண்டார். இருவரும் சேர்ந்து, "மொத்தம் 42 விடுதிகள் இயங்குகின்றன' என கண்டுபிடித்தனர். ரவீந்திரன் களத்தில் இறங்கி ஆய்வு செய்த போது, முன்பு 42-ஆக இருந்த விடுதிகள் தற்போது எண்ணிக் கையில் உயர்ந்து 63-ஆக வளர்ந் துள்ளது என கண்டுபிடித்தார். அதிகாரிகளின் ஆய்வு, விடுதி உரிமையாளர்களை டென்ஷன் அடைய வைத்தது.

"சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் இந்த விடுதிகளில் புழங்குகின்றன. லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் விநியோகிக்கப்படுகிறது. எஃப்.எல்.2 என்கிற பார் லைசென்ஸ் வைத்து மதுபானம் விநியோகிக்கும் விடுதிகளின் எண்ணிக்கை மிகச்சொற்பமே. இந்த ஒரு காரணத்தை வைத்தே இந்த விடுதிகளை வி.ஏ.ஓ. லெவலிலேயே மூடிவிட முடியும். ஆனால் இன்று வரை இந்த விடுதிகள் மூடப்பட வில்லை. ஏன்' என பொள்ளாச்சியில் விசாரித்தோம். "எப்படி எங்கள் மீது கை வைக்க முடியும். நாங்கள் எடப்பாடியிடமே பேசிவிட்டு வந்துள்ளோம்'' என்கிறார்கள் விடுதி உரிமையாளர்ள்.


"விடுதிக்கு வந்த அதிகாரிகள் கேட்ட முதல் கேள்வி, "உங்கள் விடுதிகளுக்கு வருபவர்கள் பற்றிய சி.சி.டி.வி. பதிவுகள் உங்களிடம் உள்ளதா?' என்பதுதான். அப்போதுதான் அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டோம். பொள்ளாச்சி பகுதிகளில் நடத்தப்படும் விடுதிகள் அனைத்தும் மாவட்ட மாண்புமிகு ஒருவருக்கு மாதந்தோறும் கப்பம் கட்டுபவை. காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை என விடுதி நடத்த அனுமதி தரும் பதிமூன்று துறைகளும் எங்களிடம் மாமூல் வாங்குகின்றன. அதனால் மலைப்பகுதிக்கு வரும் வி.ஐ.பி.க்கள், போலீஸ் அதிகாரிகள், ஷூட்டிங்குக்கு வரும் நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி... எங்கள் விடுதிகளின் கேமரா பதிவுகளுக்குள் எளிதாக சிக்கிக்கொள்வார்கள். அப்படித்தான் பொள்ளாச்சி காமக்கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியான திருநாவுக்கரசுடன் பல பெண்களை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், அமைச்சர் வேலுமணியின் ரத்த சொந்தங்கள் எங்களது வீடியோ பதிவுகளில் சிக்கியுள்ளனர்.


"எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரங்கள் எப்படி நடந்தன என்கிற புதிய வீடியோ பதிவுகள் வெளிவரும்' என சாம்பிளுக்கு சில காட்சிகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்களிடம் காட்டினோம். அவர்கள் வனத்துறை மானிய கோரிக்கை நடந்த நாளில் விடுதி உரிமையாளர்கள் பதினான்கு பேர் அடங்கிய டீமை எடப்பாடியிடம் பேச சொன்னார்கள். விஷயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமாக இருந்ததால், "விடுதிகள் மீது நடவடிக்கை வேண்டாம்' என உத்தரவிடப் பட்டது'' என்கிறார்கள். சி.சி.டி.வி. என்றாலே கோட்டை வரை நடுக்கம் ஏற்படுகிறது.

 

-சிவா

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.