Skip to main content

எங்களை விட உங்களுக்கே வலிக்கும்! 

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
chennai

 

நாங்கள் 
உயிருக்கு அஞ்சி 
ஓடிக்கொண்டிருக்கிறோம்;
நீங்களும் 
இரவு பகல் பார்க்காமல்
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எங்கள் ஆபத்திலிருந்தும் 
லாபம் திரட்ட
விதவிதப் புன்னகைகளோடு!


வைரஸ்களோடு 
வாழப் பழகும் படி
எங்களுக்குப் போதிக்கும்
மானுடக்காவலர்களே..(?)
உயரத்தில் இருந்து கொண்டு 
உபதேசிக்கும் நீங்கள்
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

வைரஸின் சுயம்வரத்தில் 
அது தேர்ந்தெடுக்கும் 
மணமகன்களாக
நாங்கள் மட்டுமல்ல; 
நீங்களும் இருக்கலாம்.

வாழ்க்கை மேடையின்
நீள அகலம் தெரியாமல்
கண்முடித்தனமாக  ஆடும் 
நீங்கள்;
உங்கள் காலிடறும் இடம் 
எதுவென
அடையாளம் காண்பீரா? 


உறவுகளின் பேரில் 
ஒப்பந்தம் எடுத்து 
நீங்கள் கட்டும் கட்டிடங்களில் 
இப்போது வேண்டுமானால்
நதிகள் மூச்சுத்திணறலாம்.
ஊழல் நதிகளுக்கும்
இதுவரும் என்பதை 
இதயம் இருந்தால் 
எண்ணிப் பாருங்கள்.

துயரமாகத்தான் இருக்கிறது;
தூர் வாருவதாக எண்ணிப் 
புதைகுழிகளைத் 
தோண்டாதீர்கள்.

அணைகள் கட்டுவதற்கு முன்
முதலில் மனித உயிர்களுக்கு
அணைகட்ட வழி தேடுங்கள்.

உங்கள் திறப்பு விழா மோகம்
கல்லறைகளுக்கு 
ரிப்பன் வெட்டுவதில் போய் 
முடிவதாக இருக்கவேண்டாம்.


வாழ்க்கை வேண்டுமானால்
வேறு வேறாக இருக்கலாம்
உங்களுக்கும் எங்களுக்கும்
மரணம் ஒன்றுதான்.

நம்புங்கள்
கடைசி வாகனம்
எல்லோருக்கும்
ஒரே சாயலில்தான்.

நீங்கள் பறந்து பறந்து தேடும் 
உங்கள் கரன்ஸிக்கட்டுகள்
உங்கள் கடைசி நேரத்துக்கான
ஆக்சிஜனை 
சுரக்கப் போவதில்லை.

நீங்கள் இருக்கும் போது 
எங்கள் வியர்வை 
உங்களுக்கு இனிக்கலாம்.
படுத்துவிட்டால்
உங்களுக்கு ஊற்றப்படும்
பாலும் கசப்புதான்.

மறந்துவிடாதீர்கள்;
கிருமிகளின் முன்
உங்கள் பதவியும்
 படாடோபமும் 
செல்லாக் காசைவிடவும் 
செல்லாக் காசுதான்.

நீங்கள் உங்கள் சந்ததிகளுக்கு 
ஆஸ்தி சேர்ப்பதாக நினைத்து
அஸ்த்தி சேர்க்கும் நிலைக்குச் 
சென்றுவிடாதீர்கள்.


புரிந்துகொள்ளுங்கள்
மரணத்தின் வலி
அன்றாடம் செத்துப்பிழைக்கும்
எங்களை விட
உங்களுக்குத்தான் அதிகமாக 
இருக்கும்.

*

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.