Skip to main content

காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா மோடி?

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம்? ஒரு வேறுபாடும் இல்லை என்றே சொல்ல வேண்டும். 2014 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றார். 2019 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றிருக்கிறார். 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது.

 

modi



இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னாலும் 23 கட்சிகள் கூடிப் பேசியும், கூட்டணி அமையவே இல்லை. காங்கிரஸின் பிடிவாதமும், அது விட்டுக்கொடுத்தாலும் ஏற்காத மாநிலக் கட்சிகளால் மெகாகூட்டணி அமையாமலே போயிற்று.  அதற்கு மாறாக, கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சி களையும் தாஜா செய்து தனது அணி யில் இறுக்கிப் பிடித்து வைத்தது பா.ஜ.க.. மாறாக, எங்கே தனக்கு கட்சி பலம் இல்லையோ, அங்கேயெல்லாம் கட்சிகளை உடைத்து தனது அடித்தளத்தை அமைப்பதில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.

 

modi



குறிப்பாக, திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே மொத்தமாக பா.ஜ.க.வாக்கி, அந்த மாநிலத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்து, பா.ஜ.க. ஆட்சியை அமைப்பதில் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா காலத்தில் 48 சதவீதம் வாக்குகளுடன் இருந்த இடதுமுன்னணி இப் போது 11 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்திருக் கிறது. மம்தாவை தோற்கடிப்பதற்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் நிலைமைக்கு இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் சென்றதால்தான் இந்தப் பின்னடைவு என்று அரசியல் பார்வை யாளர்கள் கூறுகிறார்கள்.

 

mamta



உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று காங்கிரஸ் கட்சி அறி வித்தது. ஆனால், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று மாயாவதி சொன்னாரே தவிர, காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்று நிரா கரித்தார். இத்தனைக்கும், காங்கிரஸ் 6 சதவீதம் வாக்குகளை வைத்திருந்தது. 2014 தேர்தலில் 4 தொகுதிகளை ஜெயித்திருந்தது. பகுஜன் சமாஜ் 2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. மாயாவதியும், அகிலேஷும் புறக்கணித்ததால் கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்தார்கள். போதாக்குறைக்கு பிரியங்காவையும் களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்தார்கள். இதுவே உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாமல் போனது. ஆனாலும் பா.ஜ.க. கடந்த முறை பெற்றிருந்த 71 இடங்களில் 11 இடங்களை இழந்திருக்கிறது. பகுஜன் சமாஜ் 11 இடங்களையும், சமாஜ்வாதி  8 இடங்களையும் பெற்றிருக்கின்றன. அமேதியில் ராகுல் தோல்வி அடைந்திருக்கிறார். கூட்டணி அமைக்கத் தவறியதால் கிடைத்த கைமேல் பலன் இதுதான்.

 

chandrababu



மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், சட்டீஸ்கரிலும் சமீபத்தில்தான் காங்கிரஸ் அரசு அமைத்திருந்தது. ஆனால், அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகள் செய்யத் தவறிய விவசாயக்கடன் தள்ளுபடியை காங்கிரஸ் அரசுகள் பொறுப் பேற்றவுடன் நிறைவேற்றியிருந்தன. அப்படியிருந்தும் தோல்வி ஏன்? இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் பா.ஜ.க. பதித்து வைத்திருக்கும் இந்துத்துவா அரசியல்தான். இரண்டு மாநிலங்களிலும் பாதிக்குப் பாதிகூட வெற்றிபெற முடியாமல் போனதற்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் மூத்தோர் இளையோர் இடைவெளியும் ஒரு காரணம்'' என்கிறார்கள்.


ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் இந்த முயற்சிக்கு அணைபோட்டு தடுத்துவிட்டார். டெல்லியில் 7 தொகுதியையும் பா.ஜ.க.விடம் இழக்க இது காரணமாக அமைந்துவிட்டது. பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருந்த மம்தா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரவர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க தவறிவிட்டனர். இதன் விளைவு மேற்குவங்கத்தில் பா.ஜ.க. 16-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற உதவியிருக்கிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், மக்களவைத் தொகுதிகளையும் ஸ்வீப் செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டணிக் குழப்பங்கள் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான சாட்சி. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பைக் காட்டிலும் மாநிலத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை தவிர்க்க முடியாத தலைவர்களால் ம.ஜ.த. ஆட்சியில் இருந் தும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வி யைத் தழுவினார். 1972 ஆம் ஆண்டிலிருந்து தோல்வியைச் சந்திக்காத மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக தோல்வி யடைகிறார். மதச்சார் பற்ற ஜனதாதளத்தின் குடும்ப அரசியல் கர்நாடக அரசியலை கேலிக்கூத்தாக்கிவிட்டது'' என்கிறார்கள்.

குடும்ப அரசியல் என்று பார்த்தால், கர்நாடகாவில் தேவ கவுடா, அவருடைய பேரன் நிகில் குமாரசாமி ஆகியோரும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவும், மத் தியபிரதேசத்தில் ஜோதி ராதித்திய சிந்தியாவும், காஷ்மீரில் முப்தி முகமது சயீதின் மகள் மெஹ்பூபா முப்தியும், தோல்வி அடைந்தனர். இதற்கு மாறாக, தமிழகத்தில் கலைஞரின் மகள் கனிமொழி, காஷ்மீரில் பரூக் அப்துல்லா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த், மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் கமல்நாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் கடந்த முறை தங்களுடைய ஒற்றுமையின்மையால் பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த எதிர்க்கட்சிகள், இம்முறையும் கூட்டணி கணக்கில் தவறியதால் மோடியை பிரதமராக்கியுள்ளன. கடந்தமுறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போகும் மோடியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த குளறுபடிகளின் விளைவு இனிமேல்தான் தெரியவரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தார்கள். அதைச் சரிசெய்வதில் மோடி தனது 2.0 ஆட்சியில் ஆர்வம் காட்டுவாரா? எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை மோடி எதிர்கொள்வாரா? அல்லது கடந்த காலத்தைப் போல காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படும் பா.ஜ.க. ஏற்கனவே வகுத்துள்ள இந்துத்வா கொள்கைப்படி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நீக்குவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, இந்து-சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பது, இந்து நாடாக மாற்றுவது என மோடி அரசின் அடுத்தடுத்த ஆட்டம் ஆரம்பமாவதைக் காண இந்தியா காத்திருக்கிறது.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.