Skip to main content

பொலிவிழக்கும் பூமி... கூகுளின் இன்றைய டூடுலை கவனித்தீர்களா?

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

Fading Earth ... Did you notice Google's Doodle today?

 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி 'உலக பூமி தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உயிர் வாழ்வதற்கு ஆதாரமான பூமிப்பந்தில்  வெப்பமயமாதல், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களும், அவற்றிலிருந்து மீள்வதற்கான உறுதிமொழிகளை கடைப்பிடிப்பதே பூமி தினத்தின் முக்கிய நோக்கமாகும். மைக்ரோ நொடிக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் சாட்டிலைட் யுகத்தில் பூமியின் தற்போதைய நிலையை அப்பட்டமாக காட்டுகிறது சாட்டிலைட் புகைப்படங்கள். ஆனால் பூமி தினத்தில் வெளியான புகைப்படங்கள் சமூக மற்றும் சூழல் ஆர்வலர்களின் மனதை கனக்க வைத்துள்ளது.

 

Fading Earth ... Did you notice Google's Doodle today?

 

இன்றைய வெளியான கூகுள் டூடுலை கவனித்திருந்தால் இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். வெப்ப மயமாதலிலிருந்து பூமியை காப்பாற்றுவதன் அவசியம் தொடர்பாக கூகுள் இன்று டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் இணையத்தின் முகப்பு பக்கத்தில் உலகில் நான்கு வெவ்வேறு பகுதிகள் அடைந்துள்ள மாற்றத்தை தேதியுடன் குறிப்பிட்டுள்ளது கூகுள். இவை ஜிப் அனிமேஷன் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை உச்சியில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்த பனிப்பாறையின் அளவையும், 2020ஆம் ஆண்டு பனியின் அளவு குறைந்திருப்பதையும் கூகுள் டூடுல் மூலம் தெளிவாகிறது. அதேபோல் கிரீன்லாந்தில் செர் மர்சூக் பகுதியிலிருந்த பனிப்பாறையின் அளவில் 2000 ஆம் ஆண்டுக்கும், 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் லிசார்ட் தீவிலிருந்து கிரேட் பாரியர் ரீஃப் எனப்படும் பொலிவிழந்த பவளப்பாறை தோற்றத்தையும் 2016 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே ஒப்பிட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதேபோல் ஜெர்மனியின் எலன் பகுதியிலுள்ள ஹார்ட்ஸ் காடுகள் அழிந்து வருவதும் கூகுள் டூடுல் காட்டியுள்ளது. 1995 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே அந்த காட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அந்த டூடுல் வெளிக்காட்டுகிறது. பூமியின் பொலிவிழந்த இந்த தோற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களை கதிகலங்க வைத்துள்ளது. பூமியின் இந்த பொலிவிழந்த காட்சியால் நாம் வாழும் பூமியை அடுத்த சந்ததியினருக்கு காப்பாற்றி வைக்க வேண்டும் என்ற கூற்றுகள் மறைந்து தற்போதைய சந்ததியினர் வாழவாவது பூமியை காப்பாற்றி வைக்க முடியுமா? என்ற எண்ணம்தான் எழுகிறது.

 

 

Next Story

36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி மார்க் 3

Published on 26/03/2023 | Edited on 27/03/2023

 

 PSLV Mark 3 launched with 36 satellites

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து பிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் 36 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்ந்தது.

 

2022-ல் ஒன் வெப் நிறுவனத்துடன் இஸ்ரோ மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 36 செயற்கைக்கோள்கள் இன்று ஏவப்பட்டது. மொத்தம் 5,805 கிலோ மொத்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை ராக்கெட் சுமந்து செல்கிறது. 450 கிலோமீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில்  செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தும் பணி துவங்கியுள்ளது.

 

திட்டமிட்டபடி ராக்கெட் பயணிப்பதாகவும், கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக பிரிந்ததாகவும், தற்பொழுது செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் பணி தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Next Story

சூரியனில் புயல்; கலக்கத்தில் விஞ்ஞானிகள்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Storm in the sun; scientists in turmoil

 

சூரியனின் ஒரு பகுதி உடைந்து புயல் போல காட்சியளிப்பது விஞ்ஞானிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சூரியனின் வட துருவப் பகுதியில் சூறாவளி போன்ற பகுதி சுழன்று கொண்டிருக்கிறது. இது ஒரு விதமான புயல் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து நிகழுமோ எனக் கலக்கத்தில் உள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பதிவான கட்சியை விஞ்ஞானி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்பொழுது அந்த சூரியப் புயல் காட்சிகள் வைரலாகி வருகிறது. கடந்த வருடம் இதேபோல் அஃபெலியன் நிகழ்வு தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.