Skip to main content

கரோனா பேரிடர்... மத்திய, மாநில அரசுகள் செயலற்று இருக்கிறது - மருத்துவர் எழிலன் குற்றச்சாட்டு!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

hjk

 

கரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலன், மத்திய - மாநில அரசுகளை சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியவதாவது, "தற்போது கரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. நம்முடைய தலைவர் தளபதி அவர்களும் இந்தப் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு பாதுகாப்பு உதவிகளை நாம் செய்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவுக்கு ஏற்ப இந்த விழா தற்போது நடைபெற்று வருகிறது. நான் ஒரு மருத்துவர், கிட்டத்தட்ட இரண்டாயிரம் கரோனா நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளேன்.

 

முதல் அலையை விட கரோனா இரண்டாவது அலை ரொம்ப மோசமாக இருக்கிறது. கரோனா கிருமி காற்றில் பரவுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் இந்தத் தொற்று மிக எளிதாக பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு இது இருமல், சளி மாதிரி வந்து மூன்று நான்கு நாட்களில் சரியாகிவிடுகிறது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீழிரிவு நோய் உள்ளவர்கள், வயதானவர்களிடம் இந்த நோய் அதீத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் நுரையீரலைக் கடுமையாக பாதிக்கிறது. நுரையீரல் தேய்மானம் ஆவது நிறைய மக்களுக்குத் தெரிவதில்லை. மருத்துவமனையில் அவர்களின் ஆக்ஸிஜன் அளவை செக் செய்து பார்க்கும்போது, அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அவர்களுக்கு அதற்குரிய எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் செயற்கை சுவாசம் செலுத்தப்பட வேண்டிய நிலைக்குச் சென்ற பின்னர்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். 

 

உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும், இப்போது இருக்கிற அதிமுக அரசும், மத்திய அரசும் செயலற்ற அரசுகளாக இருந்து வருகிறது. எந்த வகையான அடிப்படை வசதிகளையும் கூட மருத்துவமனைகளுக்கு அவர்கள் ஏற்பாடு செய்து தருவதில்லை. மருந்துகள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகம் இருக்கிறது. மருத்துவர்களும், செவிலியர்களும் அயராது உழைத்து வருகிறார்கள். ஆனால் அவர்களை இந்த அரசு பொருட்டாக நினைக்கவில்லை. விரைவில் நம்முடைய ஆட்சி அமைய இருக்கிறது. தளபதி பொறுப்பேற்க உள்ளார். ஆனால், அதுவரை மக்கள் சிரமத்தை அனுபவிக்க கூடாது, அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு இணங்க மக்களுக்கு நாம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறோம். வேட்பாளர்கள் அனைவரும் இதை சிரத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதி எடுத்திருக்கிறோம். இங்கே இருப்பவர்களுக்கு, கடை வைத்திருப்பவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். எந்த ஆபத்தான காலகட்டத்திலும் திமுக உங்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.